8 ம் வகுப்பு - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. 19ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் முகலாய பேரரசின் தலைநகரமாக இருந்த எந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது?

Answer : ஆக்ரா

2. மலைவாழிடங்களுக்கு எளிதில் சென்றடைய ஆங்கிலேயர்களுக்கு எது உதவியது?

Answer : இரயில்வே

3. ஆங்கிலேயர்கள் காலத்தில் வளர்ச்சி பெற்ற முக்கிய துறைமுக நகரங்கள் யாவை?

Answer : மதராஸ், கல்கத்தா,பம்பாய்

4. 1637 ஆம் ஆண்டு ஒரு புதிய குடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு பயணத்தை மேற்கொண்டவர் யார்?

Answer : பிரான்சிஸ் டே

5. பிரிட்டிஷாரின் எந்த வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தி தொழில்கள் அழிக்கப்பட்டன!

Answer : ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகம்

6. ஆங்கிலேயர்கள் கல்கத்தாவில் கட்டிய கோட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : புனித வில்லியம் கோட்டை

7. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் தெற்கு பகுதியில் பெரிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : சென்னை மாகாணம்

8. புனித ஜார்ஜ் கொட்டை எந்த ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது?

Answer : 1694-1732

9. ஆங்கிலேயருக்கு மதராசபட்டினத்தை மானியமாக வழங்கிய தமர்லா வெங்கடபதி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்?

Answer : வெங்கடபதி ராயலு (சந்திரகிரியின் அரசர்)

10. மதராஸ் பட்டினத்தில் கட்டப்பட்ட கோட்டை குடியிருப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : புனித ஜார்ஜ் குடியிருப்பு

1

11. ஸ்ரீரங்க ராயலு எந்த ஆண்டு பதவிக்கு வந்தார்?

Answer : 1642

12. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வர காரணம் யாது?

Answer : வர்த்தகம் செய்ய

13. இந்தியாவில் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்?

Answer : ரிப்பன் பிரபு

14. பழங்கால நகரங்கள் எனப்படுவது எது?

Answer : ஹராப்பா மற்றும் மொகஞ்சதாரோ

15. 1774 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்த இடம் எது?

Answer : புனித ஜார்ஜ் கோட்டை

16. இராணுவ குடியிருப்புகள் படிப்படியாக எவ்வாறு வளர்ச்சி அடைந்தது?

Answer : நகரங்களாக

17. பிரிட்டிஷார் தங்கள் நிர்வாக தலைநகராகவும் வணிக மையமாகவும் வளர்த்த இடங்கள் யாவை?

Answer : மும்பை, கொல்கத்தா, சென்னை

18. புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள். யார்?

Answer : டே மற்றும் கோகன்

19. ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயருக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தை எந்த ஆண்டு மானியமாக வழங்கினார்?

Answer : 1645

20. டல்ஹௌசி சதுக்கம் மற்றும் புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை எந்த பாணியில் அமைந்துள்ளன?

Answer : பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணியின்

2

21. படைகள் மற்றும் பொருட்களின் விரைவான போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : இரயில்வே நகரங்கள்

22. பெருவழிச் சாலைகள் மற்றும் போர்த்திறன் வாய்ந்த பகுதிகளில் உள்ள மாகாணங்களின் தலைநகர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : இராணுவ குடியிருப்புகள்

23. இடைக்காலத்தில் பெரும்பாலான நகரங்கள் எவ்வாறு வளர்ச்சி அடைந்தன?

Answer : பிராந்திய மற்றும் மாகாணங்களின் தலைநகரங்களாக

24. வெங்கடபதி ராயலு அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ஆங்கிலேயரின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்?

Answer : சென்னப்பட்டினம்

25. ஆங்கிலேயர்கள் மதராஸ் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இரண்டு ஐக்கிய நகரங்களையும் எவ்வாறு அழைக்க விரும்பினர்?

Answer : மதராசபட்டினம்

26. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி யாருடைய தினத்தில் அதன் முதல் தொழிற்சாலையை கட்டி முடித்து அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிட்டது?

Answer : புனித ஜார்ஜ்

27. ஆங்கிலேயர்கள் 1853 ஆம் ஆண்டு இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நகர்ப்புற குடியேற்றமாக உருவான நகரம் எது?

Answer : இரயில்வே நகரங்கள்

28. பண்டைய காலத்தில் யாருடைய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றியது?

Answer : மன்னரின் குடியிருப்பு பகுதிகள்

29. எந்த இரண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வணிகர்கள் வருகை புரியும் வரை கிராமங்களின் தொகுப்பாகவும் பனைமரம் மற்றும் நெல் வயல்களுக்கு இடையேயும் சென்னை அமைந்திருந்தது?

Answer : பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன்

30. இந்தியாவில் இருப்பு பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

Answer : 1853

3

31. யாருடைய வருகை இந்திய நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது?

Answer : ஐரோப்பியர்களின் வருகை

32. பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஒரு சட்டம் மாகாண நகரங்களில் அமைதியை ஏற்படுத்த நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை யாருக்கு அளித்தது?

Answer : தலைமை ஆளுநருக்கு

33. இந்திய பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறைய காரணம் யாது?

Answer : இறக்குமதி வரி, ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகள்

34. ஆங்கில கிழக்கிந்திய வணிக குழு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

Answer : கி.பி.1600

35. 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு மதராஸ் மாகாணம் எவ்வாறு மாறியது?

Answer : மதராஸ் மாநிலமாக

36. முகலாயர்களின் பொழுதுபோக்கு மையங்களாக விளங்கிய மலை வாழிடம் எது?

Answer : ஸ்ரீநகர்

37. 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் எதை அறிமுகப்படுத்தியது?

Answer : இரட்டை ஆட்சி

38. ஆங்கிலேயர்கள் மற்றும் கூர்க்கர்கள் இடையே (1814-16) நடைபெற்ற போரின் போது நிறுவப்பட்ட மலைவாழிடம் எது?

Answer : சிம்லா

39. மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்திய இந்திய அரசு சட்டம் எது?

Answer : 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்

40. உள்ளாட்சி அமைப்பு பற்றிய ரிப்பன் பிரபுவின் தீர்மானம் எவ்வாறு கருதப்படுகிறது?

Answer : உள்ளாட்சி அரசாங்கத்தின் மகா சாசனம்

4

41. காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவம் வாய்ந்த இடங்கள் யாவை?

Answer : மலைவாழிடங்கள்

42. பம்பாய் எத்தனை தீவுகளைக் கொண்டது?

Answer : ஏழு

43. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் எது?

Answer : 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்

44. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மசூலிப்பட்டினத்தில் தொடங்கிய தொழிற்சாலை எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : ஆர்மகான்

45. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer : 1757

46. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் சீதனமாக பெற்ற பம்பாய் பகுதியை குத்தகையாக யாருக்கு வழங்கினார்?

Answer : கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு

47. பிரிட்டிஷ் காலத்திற்கு முந்தைய நகர்ப்புற மையங்களின் வீழ்ச்சிக்கு பங்களித்த மற்றொரு காரணி எது?

Answer : 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பு பாதைகள்

48. இந்து சமய மையங்களாக விளங்கிய மலைவாழிடங்கள் யாவை?

Answer : கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்

49. ஆங்கிலேயரகளுக்கு எந்த காலநிலை கோடை காலத்தில் பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது?

Answer : இந்திய மலைகளின் குளிர்ந்த கால நிலை

50. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மேற்கிந்தியாவில் அதன் முக்கிய துறைமுகமாக எந்த பகுதியை பயன்படுத்த துவங்கியது?

Answer : பம்பாய்

5

51. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மதராஸில் எந்த ஆண்டு தங்கள் வர்த்தக மையத்தை நிறுவியது?

Answer : 1639

52. ஆங்கிலேயர்கள் சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து டார்ஜிலிங்கை எந்த ஆண்டு கைப்பற்றினர்?

Answer : 1835

53. கல்கத்தாவில் உள்ள டல்ஹௌசி சதுக்கம் மற்றும் மதராஸில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை எந்த பகுதிக்கு அருகில் இருந்தன?

Answer : மத்திய வணிகப் பகுதிக்கு

54. பருவக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்ட துறைமுகம் எது?

Answer : மசூலிப்பட்டினம்

55. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து எங்கு மாற்றியது?

Answer : பம்பாய்க்கு

56. மாநகராட்சி உருவானதற்கு காரணமாக இருந்த ஆங்கில அதிகாரி யார்?

Answer : சர் ஜோசியா சைல்ட் (கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர்களில் ஒருவர்)

57. மசூலிப்பட்டினம் கழக உறுப்பினராகவும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவராகவும் இருந்தவர் யார்?

Answer : பிரான்சிஸ் டே

58. சந்திரகிரி ராஜா தமர்லா வெங்கடபதி கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சர் பிரான்சிஸ் டேவிக்கு வழங்கிய நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : மதராஸ்

59. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

Answer : ரிப்பன் பிரபு

60. எந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கொள்கைகள் நகரமயமாக்களுக்கு எதிராக இருந்தது நிரூபணமானது?

Answer : பதினெட்டாம் நூற்றாண்டு

6

61. ஆங்கிலேயர்கள் கோடை காலத்தில் கல்கத்தாவிற்கு மாற்றாக எந்த குளிர்பகுதியை தங்கள் தலைநகராக ஏற்படுத்தினர்?

Answer : டார்ஜிலிங்

62. புனித ஜார்ஜ் குடியிருப்பு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : வெள்ளை நகரம்

63. குடியேற்ற நகரங்களுக்கு புதிய தோற்றத்தையும் மதிப்பையும் எவை அளித்தன?

Answer : இரயில்வே ட்ராம் வண்டி மற்றும் நகர பேருந்துகள்

64. இந்தியாவில் உள்ள நகரங்களை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?

Answer : மூன்று (பண்டைய கால நகரங்கள், இடைக்கால நகரங்கள் , நவீன கால நகரங்கள்)

65. வட மேற்கு எல்லை மாகாணங்களிலும், அயோத்தியிலும் நகராட்சி எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Answer : 1850

66. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்த்துக்கீசிய மன்னரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டதற்காக எந்த பகுதியை சீதனமாக பெற்றார்?

Answer : பம்பாய்

67. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது எதற்காக?

Answer : வர்த்தகத்திற்காக

68. எதன் காரணமாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகம் மசூலிப்பட்டினத்தில் செழிக்கவில்லை?

Answer : பஞ்சம்

69. படைகள் தங்குமிடமாகவும், எல்லைகளாகவும், தாக்குதலை தொடங்கும் இடமாகவும் இருந்த பகுதிகள் யாவை?

Answer : மலைப்பிரதேசங்கள்

70. ஆங்கிலேயர்கள் கோடைகாலத்தில் டெல்லிக்கு மாற்றாக எந்த குளிர் பகுதியை தங்கள் தலைநகராக ஏற்படுத்தினர்?

Answer : டேராடூன்

7

71. எந்த போருக்கு பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றதால் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது?

Answer : பிளாசிப்போர்

72. பிரான்சிஸ் டே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் புதிய குடியேற்றமாக எந்த பகுதியை தேர்ந்தெடுத்தார்?

Answer : மகராசபட்டினம்

73. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மேற்கு கடற்கரையில் உள்ள சூரத்தில் எந்த ஆண்டு ஒரு தொழிற்சாலையை அமைத்தது?

Answer : 1612

74. இந்தியாவின் நகராட்சி அரசாங்கம் சென்னையில் ஒரு மேயர் பதவியுடன் எந்த ஆண்டு உருவானது?

Answer : 1688

75. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோருக்கு வணிக தளத்துடன் கூடிய தொழிற்சாலைகளுக்கும் மதராச பட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் எந்த ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அனுமதி வழங்கியது?

Answer : 1639

76. புனித ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டி முடிக்கப்பட்டது?

Answer : 1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23

77. ஆங்கில வணிகர்கள் 1690 ஆம் ஆண்டு எங்கு ஒரு குடியேற்றத்தை நிறுவினர்?

Answer : சுதநூதியில்

78. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவில் எந்த ஆண்டு தங்கள் வர்த்தக மையத்தை நிறுவியது?

Answer : 1890

79. வெங்கடபதி ராயலுவை தொடர்ந்து பதவி வகித்தவர் யார்?

Answer : ஸ்ரீரங்க ராயலு

80. பம்பாய் எந்த ஆண்டில் இருந்து போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது?

Answer : 1534

8

81. காலணித்துவ ஆட்சியாளர்கள் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்குக்காக உருவாக்கிய இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : மலைவாழிடங்கள்

82. இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் எந்த ஆண்டு பம்பாய் பகுதியை சீதனமாக பெற்றார்?

Answer : 1661

83. ஆங்கில வணிகர்கள் சுதநூதி, கல்கத்தா மற்றும் கோவிந்தாபூர் ஆகியவற்றின்மீது ஜமீன்தாரி உரிமையை எந்த ஆண்டு பெற்றனர்?

Answer : 1698

84. 1870 ஆம் ஆண்டின் யாருடைய தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தது?

Answer : மேயோ பிரபு

85. ஆங்கிலேயர்கள் கல்கத்தாவில் நிறுவிய கோட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : வில்லியம் கோட்டை

86. இடைக்காலத்தில் நகரங்களாக செயல்பட்ட பகுதிகள் யாவை?

Answer : கோட்டை நகரம், துறைமுக நகரம்

87. எதை அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தக பாதைகள் திசை திருப்பப்பட்டு ஒவ்வொரு ரயில் நிலையமும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையங்களாக மாறியது?

Answer : இரயில்வே

88. அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தி இல்லாத தொழில்களில் ஈடுபடும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : நகர்ப்புற பகுதி

89. துறைமுகங்களை சுற்றி இருந்த மாகாணங்களின் தலைநகர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : துறைமுக நகரங்கள்

90. புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்கு கூட்டு பொறுப்புடையவர்கள் யார்?

Answer : பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன்

9

91. உள்ளாட்சி அமைச்சகம் தொடர்பான யாருடைய தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது?

Answer : ரிப்பன் பிரபு

92. ஆங்கிலேயருக்கு ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற பகுதியை புதிய மானியமாக வழங்கியவர் யார்?

Answer : ஸ்ரீரங்க ராயலு

93. ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டிய கோட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : புனித ஜார்ஜ் கோட்டை

94. சந்திரகிரி ராஜா தமர்லா வெங்கடபதி கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்த சர் பிரான்சிஸ் டேவிற்கு எந்த ஆண்டு நிலம் மானியமாக வழங்கினார்?

Answer : 1639

95. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு எந்த ஆண்டு மாற்றியது?

Answer : 1687

96. ஆங்கில ஆட்சியில் வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் எதன் வளர்ச்சியில் பிரதிபலித்தது?

Answer : நகர்புற மையங்களின் வளர்ச்சியில்

97. பிரிட்டிஷாரின் எந்த கொள்கையின் விளைவாக இந்திய அரசர்கள் தங்களது ஆட்சியை இழந்தனர்?

Answer : பல்வேறு ஏகாதிபத்திய கொள்கைகள்

98. பாரம்பரிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய கைவினை தொழில் பொருட்கள் உற்பத்தி செய்யும் நகரங்கள் எதனால் அழிந்தது?

Answer : தொழில் பரட்சியினால்

99. புனித ஜார்ஜ் கோட்டைக்குள் கடல் நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் காணப்படும் கட்டிடம் எது?

Answer : தமிழக அரசின் இருக்கை

100. ஆங்கிலேயர் சில முயற்சிகளுக்குப் பிறகு கிழக்கு கடற்கரையில் உள்ள எந்த துறைமுகத்தில் தொழிற்சாலையை கட்டும் உரிமையை பெற்றனர்?

Answer : மசூலிப்பட்டினத்தில்

10

101. மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என எப்போது மறுபெயரிடப்பட்டது?

Answer : 1996 ஜூலை 17

102. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பம்பாயில் எந்த ஆண்டு தங்கள் வர்த்தக மையத்தை மையத்தை நிறுவியது?

Answer : 1661

103. ஆங்கிலேயர்கள் எதன் உதவியினால் இந்திய பகுதிகளையும் அரசியல் அதிகாரங்களையும் கைப்பற்றினர்?

Answer : இராணுவ பலத்தால்

104. 86. புனித ஜார்ஜ் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? கருப்பு நகரம் . வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் ஆகிய இரண்டும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : மதராஸ்

105. மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என எந்த ஆண்டு மறுபெயரிடப்பட்டது?

Answer : 1969

106. எந்த சட்டத்தின் கீழ் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் அமைக்கப்பட்டன?

Answer : மாநில மறு சீரமைப்பு சட்டம்

107. சென்னை மும்பை கல்கத்தா ஆகிய மூன்று மாகாண நகராட்சிகளில் நகராட்சி நிர்வாகத்தை நிறுவிய பட்டய சட்டம் எது?

Answer : 1793 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

108. ஆங்கிலேயர்கள் டார்ஜிலிங்கை யாரிடமிருந்து கைப்பற்றினர்?

Answer : சிக்கிம் ஆட்சியாளர்களிடம்

109. ஆங்கிலேயர்களுக்கு வலுவான இராணுவ முகாம்கள் தேவைப்பட்டதால் எந்த குடியிருப்புகளை உருவாக்கினர்?

Answer : இராணுவ குடியிருப்புகளை

110. நகராட்சி உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர் யார்?

Answer : ஜோசியா சைல்டு

11

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share