7ம் வகுப்பு - தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. நவீன காலம் வரை தொடர்ந்து செழிப்படைந்த சமயங்கள் யாவை?

Answer : சமணம் மற்றும் பௌத்தம்

2. கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்த பலவகைப்பட்ட சமயங்களில் இடைக்காலத்தில் பிற்பகுதி வரை செயல்பாட்டில் இருந்த சமயம் எது?

Answer : ஆசீவகம்

3. கி.மு ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ சமயப் பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாக கூறும் நூல் எது?

Answer : பிகநிதியா (பழமையான பௌத்த நூல்)

4. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எங்கு கூடிய சமணப் பேரவை கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது?

Answer : வல்லபி

5. தங்களது அற போதனைகளில் வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தவர்கள் யாவர்?

Answer : மகாவீரர் மற்றும் புத்தர்

6. எதை வரையறுப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட முடியாமல் போனதால் முதல் சமண பேரவை கூட்டம் தோல்வியில் முடிந்தது?

Answer : சட்ட விதிகள்

7. ஆகம சூத்திரங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

Answer : அர்த்த-மகதி பிராகிருத மொழி

8. ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள், தனி நபர்களால் எழுதப்பட்டு துறவிகளாளும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்ட நூல்களை உள்ளடக்கியது எது?

Answer : ஆகமங்கள் அல்லாத நூல்கள்

9. கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் ஏற்பட்ட இரு பெரும் பிரிவுகள் யாவை?

Answer : 1. திகம்பரர் 2. சுவேதாம்பரர்

10. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது?

Answer : 84

1

11. பஞ்சதந்திரம் என்ற நூலில் பெருமளவில் எந்த சமயத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது?

Answer : சமணம்

12. ஆகம சூத்திரத்தில் தொலைந்து போனதாக கருதப்படும் நூல் எது?

Answer : 12 வது நூல்

13. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன?

Answer : 41

14. ஆகம சூத்திரம் எத்தனை நூல்களைக் கொண்டது?

Answer : 12

15. 11 அங்கங்களை பின்பற்றியவர்கள் யார்

Answer : ஸ்வேதாம்பரர்கள்

16. சமணத்தின் அடிப்படை கோட்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : ஐந்து மூலங்கள்

17. ஆகம சூத்திரங்கள் யாருடைய நேரடி போதனைகளை உள்ளடக்கியது ஆகும்?

Answer : மகாவீரர்

18. ஆகம சூத்திரம் யாரால் தொகுக்கப்பட்டதாகும்?

Answer : மகாவீரரின் நேரடி சீடர்களால்

19. அறிஞர்கள் சமண சமயத்தின் கொள்கைகளை உறுதிபட விளக்க ஊக்குவித்த சமணப் பேரவை கூட்டம் எது?

Answer : வல்லபி

20. ஆகம சூத்திரங்கள் எவற்றை உள்ளடக்கியது?

Answer : சமண சமய புனித நூல்களை

2

21. சமண மதத்தின் துறவிகளுக்கான நடத்தை விதிகளை கூறுவது எது?

Answer : ஐந்து சேடாக்கள்

22. 12 உப அங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : நெறிமுறை குறிப்பேடுகள்

23. திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே எதை தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர்?

Answer : ஆகம சூத்திரங்களை

24. 11 அங்கங்களையும், 12 உப அங்கங்களையும், 5 சேடாக்களையும், 5 மூலங்களையும், பத்திர பாகுவின் கல்பசூத்திரா போன்ற எட்டு பல்வகைப்பட்ட நூல்களையும் கொண்டது எது?

Answer : 41 சூத்திரங்கள்

25. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை மாபெரும் உரை ( மகா பாஷ்யா) இடம்பெற்றுள்ளது?

Answer : 1

26. சமண இலக்கியங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

Answer : இரண்டு 1. ஆகம சூத்திரங்கள் 2. ஆகமங்கள் அல்லாத சூத்திரங்கள்

27. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் எத்தனை உரைகள் இடம் பெற்றுள்ளன?

Answer : 12

28. நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகத்திற்கும் அடுத்த உலகத்திற்கும் இடையே பாதை அமைப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Answer : தீர்த்தங்கரர்கள்

29. கல்பசூத்ராவின் ஜைனசரிதா என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer : பத்திரபாகு

30. பார்சவ நாதர் மற்றும் மகாவீரரின் வரலாறுகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Answer : கல்பசூத்ராவின் ஜைனசரிதா

3

31. சமண சமயத்தின் கடைசி மற்றும் 24 ஆவது தீர்த்தங்கரர் யார்?

Answer : மகாவீரர்

32. சமண சமயத்தை நிறுவிய முதல் தீர்த்தங்கரர் யார்?

Answer : பார்சவநாதர்

33. கி.மு 296 இல் சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்கு புலம் பெயர்ந்து பின் அங்கேயே குடியமர்ந்தவர் யார்?

Answer : பத்திரபாகு

34. சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கமாகக் கொண்ட நூல் எது?

Answer : கல்பசூத்ராவின் ஜைனசரிதா

35. நாலடியார் என்ற நூலை இயற்றியவர்கள் யார்?

Answer : சமண துறவிகள்

36. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : கொங்கு பகுதிகள்

37. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : பாண்டிய நாடு

38. தன்சொந்த முயற்சியால் மேநிலையை அடைந்து சமயப்பற்றுடைய, இறுதியில் துறவுபூண்ட ஒரு அரசனின் வாழ்க்கையை வர்ணிக்கும் நூல் எது?

Answer : சீவக சிந்தாமணி

39. பொதுவாக தமிழர்கள் சமணத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தனர்?

Answer : திகம்பரர்

40. சீவக சிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?

Answer : திருத்தக்க தேவர்

4

41. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சமண நூல் எது?

Answer : சீவக சிந்தாமணி

42. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது?

Answer : சமணம்

43. களப்பிரர்கள் எந்த மதத்தின் ஆதரவாளர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது?

Answer : சமணம்

44. சமணர்கள் எங்கிருந்து கொங்கு பகுதிக்கும், காவிரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டை பகுதிக்கும், பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர்?

Answer : கர்நாடகாவில் இருந்து

45. திருச்சிராப்பள்ளி, தெற்கு முகமாக புதுக்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : காவிரியின் கழிமுகப்பகுதி

46. எந்த குகையின் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக்கோவிலும் உள்ளன?

Answer : சித்தன்னவாசல்

47. சித்தன்னவாசல் குகையில் வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் எத்தனை சமணப் படுக்கைகள் அமைந்துள்ளன?

Answer : 17

48. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எந்த குகை நிலப்பகுதியிலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும் பாறை ஒன்றில் அமைந்துள்ளது?

Answer : சித்தன்னவாசல்

49. சித்தன்னவாசலில் வரிசையாக அமைந்துள்ள எது சமணர்களின் தங்கும் இடங்களாக இருந்ததாக நம்பப்படுகிறது?

Answer : சமணப் படுகைகள் எனப்படும் கல்தூயிலிடங்கள்

50. சித்தன்னவாசல் குகை கோவிலில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோவில் எது?

Answer : அறிவர் கோவில்

5

51. சித்தன்னவாசலில் அளவில் பெரியதாக உள்ள கற்படுகையில் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த எம்மொழியிலான கல்வெட்டுக்கள் உள்ளன?

Answer : தமிழ்-பிராமி

52. அறிவர் கோவில் எந்த நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும்?

Answer : ஏழாம் நூற்றாண்டு

53. எந்த கோவிலின் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பதாக உள்ள மண்டபத்தின் இடப்புற சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்களும் வலப்புறச் சுவரில் ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன?

Answer : அறிவர் கோவிலில்

54. அறிவர் கோவிலில் காணப்படும் சுவரொவியங்கள் எந்த சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன?

Answer : அஜந்தா சுவரோவியங்களுடன்

55. அறிவர் கோவில் எந்த அரசர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்?

Answer : முற்கால பாண்டியர்கள்

56. அறிவர் கோவிலை மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை எந்த ஆண்டு தனது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தது?

Answer : 1958

57. அறிவர் கோவிலை ASI தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் அதை சுற்றி வேலி அமைக்கவும் பார்வையாளரின் வருகையை முறைப்படுத்தவும் எத்தனை ஆண்டுகள் ஆனது?

Answer : 20 ஆண்டுகள்

58. விஜயநகர ஆட்சியின் போது புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடர் யார்?

Answer : இருகப்பா

59. காஞ்சிபுரத்தில் எத்தனை சமண கோவில்கள் உள்ளன?

Answer : இரண்டு

60. திரிலோக்கியநாத ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் யாருடைய கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது?

Answer : பல்லவர்கள்

6

61. விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயரின் காலம் யாது?

Answer : 1377-1404

62. தமிழகத்தில் யாருடைய ஆட்சி காலத்தில் சமண மதம் செழித்தோங்கியது?

Answer : பல்லவர்கள்

63. பல்லவ அரசர் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் எந்த மதத்தை பின்பற்றினார்?

Answer : சமணம்

64. திரிலோக்கியநாத ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில்களின் சங்கீத மண்டபம் ஒன்றைக் கட்டி கோவிலை விரிவு படுத்தியவர்கள் யாவர்?

Answer : இருகப்பா மற்றும் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சர்

65. காஞ்சிபுரத்தில் உள்ள சமண கோவில்களில் யாருடைய காலத்தில் அழகுமிக்க சுவர் ஓவியங்கள் வரையப்பட்டது?

Answer : இருகப்பா மற்றும் இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சர்

66. கி.பி ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீன பயணி யார்?

Answer : யுவான் சுவாங்

67. பெரும்பாலான பல்லவ அரசர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்?

Answer : சமணம்

68. கி.பி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகளின் கற்படுகைகள் எங்கு காணப்படுகிறது?

Answer : பைரவ மலையில் ( வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா)

69. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சமணர்கள் எத்தனை விழுக்காடு உள்ளனர்?

Answer : 0.12

70. தமிழ்நாட்டில் சமணம் புத்துயிர் பெற்றதை குறிக்கும் கோவில் எங்கு உள்ளது?

Answer : கழுகு மலையில் உள்ள சமண கோவில் (தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம்)

7

71. எந்த சமண மத கோவில் புதுப்பித்தல் பணியின்போது வண்ணங்கள் பூசப்பட்டு விட்டதால் பாழாகிவிட்டன?

Answer : திருப்பருத்தி குன்றத்தில் உள்ள திரிலோக்கியநாதர் கோவில்

72. திருலோக்கியனாக ஜைனசாமி கோவில் மற்றும் சந்திர பிரபா கோவில்களில் உள்ள யாருடைய வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளை சித்தரிக்கின்றன?

Answer : தீர்த்தங்கரர்கள்

73. எந்த கோவிலில் பஞ்சவர் படுக்கை என்றழைக்கப்படும் பாறையில் செதுக்கி மெருகேற்றப்பட்ட கற்படுகைகள் உள்ளன?

Answer : கழுகுமலை சமண கோவில்

74. கழுகுமலையில் உள்ள சமண கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்ததாகும்?

Answer : கி.பி எட்டாம் நூற்றாண்டு

75. திருப்பருத்தி குன்றத்தில் உள்ள திருலோக்கியநாதர் கோவிலின் எப்பகுதியில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன?

Answer : திரிகூட பஸ்தி எனப்படும் இரண்டாவது கருவறையில்

76. மதுரைக்கு அருகே உள்ள எந்த கிராமத்தில் சமணர்களின் குகைகள், கற்படுகைகள், கல்வெட்டுகள் ஆகியவை அதிகம் காணப்படுகிறது?

Answer : கீழக்குயில்குடி கிராமம்

77. எந்த சமயத்தில் கல்வி நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்றுத் தரப்பட்டது?

Answer : சமணர்களின் கல்வி நிறுவனங்களில்

78. புத்தரின் உண்மையான பெயர் யாது?

Answer : சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர்

79. மதுரை நகருக்கு மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை தேனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குன்று எது?

Answer : கீழக்குயில்குடி குன்று

80. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை யாது?

Answer : 83,359

8

81. கீழக்குயில்குடி கிராமத்தின் குன்றுகளில் உள்ள சிற்பங்கள் எந்த பாண்டிய அரசரின் காலத்தை சேர்ந்தவையாகும்?

Answer : பராந்தக வீரநாராயண பாண்டியன்

82. கழுகு மலைக் குகை கோவிலில் தீர்த்தங்கரர்களின் உருவங்களைத் தவிர யாருடைய உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன?

Answer : யக்சர்கள் மற்றும் யக்சிகள் ( ஆண் பெண் பணியாளர்கள்)

83. ஏனைய பகுதிகளில் காணப்படும் கற்படுகையில் உள்ள தலையணை பகுதி எங்கு உள்ள கற்படுகையில் காணப்படவில்லை?

Answer : பைரவ மலையில் உள்ள சமணர் படுகையில்

84. மூன்று சமண குகைகளும், இரண்டு சமண கோவில்களும், 22 வது தீர்த்தங்கரரான நேமிநாதருடைய 16 மீட்டர் உயரமுடைய சிலையும் எங்கு அமைந்துள்ளது?

Answer : திருமலை சமணக் கோவிலின்

85. கீழக்குயில் குடி கிராமத்தின் குன்றில் எத்தனை சிற்பங்கள் காணப்படுகின்றன?

Answer : 8

86. கழுகுமலை சமண கோவிலை உருவாக்கியவர் யார்?

Answer : பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்செடையான்

87. சமண மடாலயங்களும் கோவில்களும் எவ்வாறு சேவை செய்துள்ளனர்?

Answer : கல்வி கற்றுக் கொடுக்கும் மையங்களாக

88. தூய்மையான நடத்தையைப் பெற எவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்?

Answer : வினய பீடகா

89. புத்தரின் போதனைகள் எந்த ஆண்டு எழுதப்பட்டது?

Answer : கி.மு 80

90. கி.பி 860 முதல் 900 ஆண்டு வரை ஆட்சி புரிந்த பாண்டிய அரசன் யார்?

Answer : பராந்தக வீரநாராயண பாண்டியன்

9

91. சமணர்களின் கல்வி நிலையங்களில் அவற்றோடு இணைக்கப்பட்ட எதைக் கொண்டிருந்தன?

Answer : நூலகங்களை

92. பைரவ மலை எந்த கிராமத்தின் அருகே அமைந்துள்ளது?

Answer : குக்கரப்பள்ளி

93. அரச வாழ்வு என்பது?

Answer : மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்

94. துறவு வாழ்வு என்பது?

Answer : தன்னடக்க நிலையை எய்துவது

95. அரச வாழ்வு மற்றும் துறவு வாழ்வு ஆகிய இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வழியாக புத்தர் கூறிய வழி எது?

Answer : எண்வகைவழி

96. கௌதம புத்தரின் தந்தை இன்றைய நேபாளத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் எந்த இனக்குழுவின் தலைவராக ஆட்சி புரிந்து வந்தார்?

Answer : சாக்கிய

97. தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரின் அருகே ஒரு குகை வளாகத்தில் அமைந்துள்ள சமண கோவில் எது?

Answer : திருமலை சமணக் கோவில்

98. விவாதங்களை சான்றுகளாக கொண்டு பௌத்தத்தின் மூலக்கோட்பாடுகளை கூறுவது எது?

Answer : சுத்த பீடகா

99. பெண்கள் துறவறம் பூணவும், பெண்களிடையே கல்வியை கொண்டு செல்லவும் ஊக்கம் அளித்த சமயம் எது?

Answer : சமணம்

100. சமணர்களின் கல்வி மையம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : பள்ளி

10

101. தமிழ்நாட்டில் உள்ள சமண சிலைகளில் மிகவும் உயரமானதாக கருதப்படும் சிலை எது?

Answer : திருமலை சமணக் கோவிலில் காணப்படும் நேமிநாதர் சிலை

102. திருமலை சமண கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?

Answer : கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு

103. எதன் சுற்று வட்டார பகுதிகளில் 26 குகைகளும், 200 சமண கற்படுகைகளும், 60 கல்வெட்டுகளும், 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன?

Answer : மதுரை

104. துறவு வாழக்கையை மேற்கொண்ட பின்னரும் எங்கிருந்தும் உண்மையான பொருளை உணர முடியாதவராய் இருந்தவர் யார்?

Answer : கௌதமர்

105. மானுட துயரங்கள் குறித்த புதிரையும், அதற்கான காரணங்களையும் களைவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்வதில் வெற்றி பெற்றவர் யார்?

Answer : கௌதம புத்தர்

106. அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என உறுதிப்படக் கூடியவர் யார்?

Answer : கௌதம புத்தர்

107. ரிஷபநாதர் அல்லது ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி ஆகியோரின் சிற்பங்கள் மதுரைக்கு அருகே எந்த கிராமத்தில் உள்ள குன்றில் காணப்படுகிறது?

Answer : கீழக்குயில்குடி

108. பௌத்த துறவிகளுக்கான விதிகள் எதில் இடம் பெற்றுள்ளன?

Answer : வினய பீடகா

109. திரிபிடகா என்ற பௌத்த பொது விதிகள் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ளது?

Answer : மூன்று

110. திரிபிடகா என்ற பௌத்த பொது விதிகள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

Answer : பாலி மொழியில்

11

111. புத்தரின் போதனைகள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

Answer : பாலி மொழியில்

112. கௌதம புத்தர் யாருடைய சமகாலத்தவர் ஆவார்?

Answer : மகாவீரர்

113. பௌத்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள்?

Answer : பிச்சுகள்

114. திரிபிடகா என்பதன் பொருள் யாது?

Answer : மூன்று கூடைகள்

115. சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதன் ஆங்கில மொழியாக்கம் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது?

Answer : கௌதமர் சாக்கிய இனக் குழுவை சேர்ந்தவர் மேலும் அவர் முழு நிறைவு எனும் இலக்கை எட்டியவர்

12

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share