6 ம் வகுப்பு - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. எந்த நூற்றாண்டில் புதிய பிராந்திய அரசுகள் உருவானதன் விளைவாக கங்கைச் சமவெளியில் வாழ்ந்த மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன?

Answer : கி.மு ஆறாம் நூற்றாண்டு

2. இரும்பை பயன்படுத்துவதில் ஏற்பட்ட நிபுணத்துவம் மற்றைய மகாஜனபதங்களை விட எந்த அரசு எழுச்சிபெற முக்கிய காரணமாயிற்று?

Answer : மகதம்

3. கி.மு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இரண்டு வகையான அரசுகள் எவை?

Answer : கண சங்கங்கள் மற்றும் முடியாட்சி அரசுகள்

4. கங்கை சமவெளியில் எதன் காரணமாக வேளாண் உற்பத்தி அதிகரித்தது?

Answer : இரும்பினாலான கொழுமுனையின் பயன்பாடு

5. முடியாட்சி என்றால் என்ன?

Answer : ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதாகும்

6. மக்கள் குழுவாக குடியேறிய தொடக்ககால இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : ஜனபதங்கள்

7. சங்கா என்ற சொல்லின் பொருள் யாது?

Answer : மன்றம்

8. கணா என்ற சொல்லின் பொருள் யாது?

Answer : சரிசமமான சமூக அந்தஸ்தை கொண்ட மக்களை குறிக்கும்

9. ஹரியங்கா வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?

Answer : பிம்பிசாரர்

10. கடைசி நந்த அரசர் யார்?

Answer : தனநந்தர்

1

11. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் மதம் சார்ந்த இலக்கியங்கள் எவை?

Answer : சமண, பௌத்த நூல்கள் மற்றும் புராணங்கள்

12. மகதத்தின் தலைநகரை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியவர் யார்?

Answer : காலசோகா

13. ஜூனாகத் கல்வெட்டு எந்த பேரரசிற்குரிய கல்வெட்டு சான்றாகும்?

Answer : மௌரிய பேரரசு

14. அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?

Answer : கி.மு 261

15. பிந்துசாரரின் இயற்பெயர் என்ன?

Answer : சிம்ஹசேனா

16. எந்தப் பெயரிலான அமைச்சரவை ஒரு புரோகிதர், ஒரு சேனாபதி, ஒரு மகா மந்திரி மற்றும் இளவரசரைக் கொண்டதாகும்?

Answer : மந்திரிபரிஷத்

17. கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவர் யார்?

Answer : மெகஸ்தனிஸ்

18. பண்டைய மகதத்தை எத்தனை அரச வம்சங்கள் ஆட்சி செய்தன?

Answer : நான்கு அரச வம்சங்கள்

19. அசோகரின் எத்தனையாவது தூண் கல்வெட்டில் தர்மத்தின் பொருள் குறித்து விளக்கப்பட்டுள்ளது?

Answer : இரண்டாம் தூண் கல்வெட்டு

20. காந்தகார் பகுதியில் அசோகரின் கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன?

Answer : கிரேக்கம் மற்றும் அராபிக்

2

21. இரண்டாவது பௌத்த மாநாட்டை கூட்டியவர் யார்?

Answer : காலசோகா

22. அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் எவ்வாறு அழைக்கப்படும்?

Answer : பேராணை

23. நாளந்தா எனும் சமஸ்கிருதச் சொல் எந்த மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது?

Answer : நா + அலம் + தா

24. வெள்ளி நாணயங்களில் (பணம்) எந்தெந்த வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன?

Answer : மயில், மலை மற்றும் பிறைச்சந்திரன்

25. பண்டைய மகத நாட்டில் இருந்த பௌத்த மடாலயம் எது?

Answer : நாளந்தா

26. பாகா வரிமுறையில் மொத்த விளைச்சலில் எத்தனை பங்கு நில வரியாக வசூல் செய்யப்பட்டது?

Answer : 1/6 பங்கு

27. பேரரசர் அசோகர் உடைய ஆணைகள் மொத்தம் எத்தனை?

Answer : 33

28. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் வெளிநாட்டு சான்றுகள் எவை?

Answer : தீபவம்சம். மகாவம்சம், இண்டிகா

29. கலிங்கப் போரின் பயங்கரத்தை அசோகர் தன்னுடைய எத்தனையாவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்?

Answer : 13 வது பாறை கல்வெட்டு

30. மௌரிய பேரரசின் மாபெரும் தலைநகரான பாடலிபுத்திர நகரம் எத்தனை நுழைவாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை கொண்டிருந்தது?

Answer : 64 நுழைவுவாயில்கள் மற்றும் 570 கண்காணிப்பு கோபுரங்கள்

3

31. மௌரியர்களின் நிர்வாகத்தில் நீதித் துறையின் தலைவராக இருந்தவர் யார்?

Answer : அரசர்

32. இந்தியாவின் முதல் பேரரசு எது?

Answer : மௌரியப் பேரரசு

33. மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?

Answer : சந்திரகுப்த மௌரியர்

34. இந்தியாவில் முதன் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள் யார்?

Answer : நந்த வம்சத்தினர்

35. பிம்பிசாரரின் மகன் யார்?

Answer : அஜாதசத்ரு

36. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சமய மாநாட்டை கூட்டியவர் யார்?

Answer : அஜாதசத்ரு

37. அசோகர் எந்த போருக்குப்பின் பௌத்த மதத்தை தழுவினார்?

Answer : கலிங்கப்போர்

38. சாரநாத் கற்றூணிண் சிகர பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும் வட்ட வடிவ அடிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசிய கொடியின் மையமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

Answer : (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது. (வடக்கே) சிங்கம்

39. கரோஸ்தி எழுத்துக்கள் அசோகரின் எந்தப் பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தது?

Answer : வடமேற்கு பகுதி

40. மௌரியர்களின் நிர்வாகத்தில் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்?

Answer : அரசர்

4

41. மௌரிய பேரரசின் தலைநகர் எது?

Answer : பாடலிபுத்திரம்

42. அசோகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் எத்தனையாவது பௌத்த மத மாநாட்டை கூட்டினார்?

Answer : மூன்றாவது பௌத்த மத மாநாடு

43. நகர நிர்வாகம் எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?

Answer : நகரிகா

44. பிந்துசாரர் தனது மகனான அசோகரை எந்த பகுதியின் ஆளுநராக நியமித்தார்?

Answer : உஜ்ஜையினி

45. பிந்துசாரரை கிரேக்கர்கள் எவ்வாறு அழைத்தனர்?

Answer : அமிர்தகதா

46. அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும், மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தை பரப்புவதற்காக எங்கு அனுப்பி வைத்தார்?

Answer : இலங்கை

47. லும்பினியிலுள்ள அ அசோகரது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வரிமுறைகள் எவை?

Answer : பாலி மற்றும் பாகா

48. அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது எது?

Answer : நிலங்கள்

49. சந்திரகுப்த மௌரியர் சரவணபெலகோலாவில் (கர்நாடகா) எந்த சமய சடங்கு செய்து உயிர் துறந்தார்?

Answer : சல்லேகனா

50. மௌரியர்களின் படை எத்தனை குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

Answer : 6 குழுக்கள்

5

51. முதல் நந்த வம்ச அரசர் யார்?

Answer : மகாபத்ம நந்தர்

52. நான்கு முக்கிய மகாஜனபதங்கள் யாவை?

Answer : மகதம் , அவந்தி , கோசலம், வத்சம்

53. சாஞ்சியில் இருந்த அசோகரின் கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன?

Answer : பிராமி

54. கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கை சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?

Answer : 16 மகாஜனபதங்கள்

55. தம்ம அசோகர் என்பதன் பொருள் யாது?

Answer : நீதிமான் அசோகர்

56. பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தை பரப்புவதற்காக அசோகர் எந்த புதிய அதிகாரிகளை நியமித்தார்?

Answer : தர்ம மகாமாத்திரர்கள்

57. அரசாங்கம் பணியாளர்களுக்கு ஊதியத்தை எவ்வாறு வழங்கியது?

Answer : பணமாக வழங்கியது

58. தர்மத்தின் கொள்கையை நாட்டு மக்களுக்கு பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் பெயர் என்ன?

Answer : தர்மயாத்திரைகள்

59. யாருடைய காலத்தில் நாளந்தா புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது?

Answer : குப்தர்கள் காலம்

60. மௌரிய பேரரசுக்கு சான்றாக விளங்கும் மதச்சார்பற்ற இலக்கியங்கள் எவை?

Answer : கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சஷம், மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்

6

61. எந்த நாணயங்கள் மாஸாகாஸ் என அழைக்கப்பட்டன?

Answer : செப்பு நாணயங்கள்

62. அசோகர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

Answer : தேவனாம்பிரியர்

63. எங்கு அமைந்துள்ள அசோகரின் தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும், இந்தியாவின் தேசிய கொடியின் மையம் சக்கரம் ஆகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?

Answer : சாரநாத் கற்றூண்

64. காசி (பனாரஸ்), வங்கா (வங்காளம்), காமரூபா (அஸ்ஸாம்) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை ஆகிய இடங்களில் சிறப்புமிக்க துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer : அர்த்தசாஸ்திரம்

65. மௌரியர்கள் காலத்தில் எந்தெந்த நாடுகளுடன் பெருமளவு வணிகம் நடைபெற்றது?

Answer : கிரேக்கம் (ஹெலனிக்), மலேயா, இலங்கை, பர்மா

66. அசோகருடைய எந்த இரண்டு பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சோழர், கேரள புத்திரர் ஆகியோரையும், சத்திய புத்திரர்களையும் குறிப்பிடுகின்றது?

Answer : 2 மற்றும் 13 ஆம் பாறை கல்வெட்டுகள்

67. மௌரியர்களின் நகர நிர்வாகம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டது?

Answer : 30 உறுப்பினர்கள்

68. எந்த பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பழங் காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பல கோட்டை சுவர்களை இணைத்து சீன பெருஞ்சுவரை உருவாக்கினார்?

Answer : குன்-சி-ஹங்

69. 'அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்'என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்?

Answer : H.G.வெல்ஸ்

70. மடாலயம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?

Answer : Monastery

7

71. சாஞ்சி எங்கு அமைந்துள்ளது?

Answer : மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு அருகில்

72. நாகார்ஜுனா பராபர் குன்றுகளில் உள்ள 3 குகைகளில் யாருடைய அர்ப்பணிப்பு கல்வெட்டுகள் உள்ளன?

Answer : அசோகர்

73. மௌரியர்கள் காலத்தில் முக்கிய இறக்குமதி பொருட்கள் எவை?

Answer : குதிரைகள், தங்கம், கண்ணாடி பொருட்கள், பட்டு (லினன்)

74. மௌரியர் கால கலை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது?

Answer : இரண்டு வகைகள்(உள்ளூர் கலை, அரச கலைகள் )

75. சமத்துவம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?

Answer : Egalitarian

76. ஆய்வுநூல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் யாது?

Answer : Treatise

77. ராஜகிரகம் என்பதன் தற்போதைய பெயர் என்ன?

Answer : ராஜ்கிர்

78. நாகார்ஜுன கொண்டாவிலுள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன?

Answer : தசரத மெளரியர்

79. கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் எந்த கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?

Answer : ஜியஸ்

8

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share