6 ம் வகுப்பு - பண்டைக்கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்ககாலம்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?

Answer : சேரன் செங்குட்டுவன்

2. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் யாவர்?

Answer : களப்பிரர்கள்

3. அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை?

Answer : பல்லவர்

4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு எது?

Answer : ஊர்

5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

Answer : வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

6. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் எவ்வாறு அமைந்திருந்தது?

Answer : ஊர் - கூற்றம் -நாடு -மண்டலம்

7. 'தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது' என்றும் 'ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக அது உருபெற்று எழுந்துள்ளது' என்றும் கூறியவர் யார்?

Answer : கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்

8. சங்க காலத்தில் சோழ அரசு எந்த மலை வரை விரிந்திருந்தது?

Answer : வேங்கட மலைகள்

9. சங்ககாலத்தை பற்றி அறிய உதவும் அகழ்வாய்வில் இருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள் யாவை?

Answer : ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்

10. பாண்டிய அரசர்கள் எந்தவகை பட்டங்களை சூட்டிக் கொண்டனர்?

Answer : மாறன், வழுதி, செழியன், தென்னர்

1

11. பாண்டிய நாடு எதற்கு புகழ் பெற்றது?

Answer : முத்துக்குளித்தல்

12. பனம்பூ மாலை எந்த அரசர்களுக்கு உரிய மாலையாகும்?

Answer : சேர அரசர்கள்

13. முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள் யாவர்?

Answer : நெடியோன், நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி நெடுஞ்செழியன்

14. எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்?

Answer : முதுகுடுமிப் பெருவழுதி

15. பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் எந்தெந்த விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன?

Answer : ஒருபுறம் யானை, மற்றொருபுறம் மீன்

16. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்கு திருவிதாங்கூர். கொச்சி, தெற்கு மலபார் கொங்கு மண்டலம் ஆகிய பகுதியை ஆட்சி செய்தவர்கள்?

Answer : சேரர்கள்

17. ஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை என்னும் பட்டங்கள் எந்த அரசர்களால் சூட்டிக்கொள்ளப்பட்ட பட்டங்களாகும்?

Answer : சேர அரசர்கள்

18. சங்கம் என்ற சொல் எதனை குறிப்பிடுகிறது?

Answer : தமிழ் புலவர்களின் குழுமம்

19. சங்க காலத்தை பற்றி அறிய உதவும் செப்புப்பட்டயங்கள் யாவை?

Answer : வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடு

20. எந்த அரசர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார்?

Answer : கரிகால் வளவன் அல்லது கரிகாலன்

2

21. அரசு அதிகாரத்தின் சின்னங்கள் அல்லது அரசுரிமை சின்னங்கள் எனப்படுபவை யாவை?

Answer : செங்கோல் (scepter), முரசு (Drum), வெண்கொற்றக்குடை (White Umbrella)

22. எந்த சேர அரசர் வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று, சிலப்பதிகார காவியத் தலைவியான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையில் இருந்து கற்களை கொண்டு வந்தார்?

Answer : சேரன் செங்குட்டுவன்

23. எந்த அரசர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார்?

Answer : நெடுஞ்செழியன்

24. முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள் யாவர்?

Answer : உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை

25. சோழ அரசர்களுக்கு உரிய மாலை எது?

Answer : அத்திப்பூ மாலை

26. எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் மற்றும் 5 வேளிர் குல தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார்?

Answer : நெடுஞ்செழியன்

27. பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளை செலவிட்டவர்கள் யார்?

Answer : ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்), உ.வே.சாமிநாத அய்யர்

28. எந்த சேர அரசர் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?

Answer : சேரல் இரும்பொறை

29. சங்ககால தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டிக்காட்டும் நூல் எது?

Answer : தொல்காப்பியம்

30. முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள் யாவர்?

Answer : இளஞ்சேட்சென்னி, கரிகால் வளவன், கோச்செங்கணான். கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி

3

31. எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன?

Answer : பதிற்றுப்பத்து

32. சங்க காலத்தின் கால அளவு யாது?

Answer : கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை

33. கல்லணை கட்டப்பட்டபோது அது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது?

Answer : 69,000 ஏக்கர்

34. எந்த பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது?

Answer : பட்டினப்பாலை

35. சென்னி, செம்பியன், கிள்ளி, வளவன் போன்ற பட்டங்கள் எந்த அரசர்களால் சூட்டிக்கொள்ளப்பட்ட பட்டங்களாகும்?

Answer : சோழ அரசர்கள்

4

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share