6 ம் வகுப்பு - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை எவ்வாறு குறிப்பிடுகின்றன?

Answer : சமணம்

2. இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் காலம் எது?

Answer : கி.மு. ஆறாம் நூற்றாண்டு

3. அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என எந்த நூலில் குறிப்பு உள்ளது?

Answer : மணிமேகலையில்

4. நட்சத்திரங்களின் மழை என்று வர்ணிக்கப்படும் காலம் எது?

Answer : கி.மு.ஆறாம் நூற்றாண்டு

5. எந்த மலையில் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் உருவங்கள் காணப்படுகின்றன.

Answer : சமணர் மலையில்

6. புத்தரின் போதனைகள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?

Answer : தம்மா

7. மகாவீரரை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Answer : சமணர் (Jaits)

8. சாக்கிய முனி என்று அழைக்கப்பட்டவர்?

Answer : புத்தர்

9. சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் எந்த நிற ஆடைகளை அணிகின்றனர்?

Answer : வெள்ளை நிறம்

10. முதல் தீர்த்தங்கரர் யார்?

Answer : ரிஷபர்

1

11. சமணம் எத்தனை தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது?

Answer : 24

12. எந்த பிரிவைச் சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை?

Answer : திகம்பரர் பிரிவு

13. பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் எங்கு அமைந்துள்ளன?

Answer : கலிஞ்சமலையில்

14. கடைசித் தீர்த்தங்கரர் யார்?

Answer : மகாவீரர்

15. பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?

Answer : கௌதம புத்தர்

16. அஜந்தா குகை ஓவியங்கள் எங்கு உள்ளன?

Answer : மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்

17. சத்யா ‌என்பதன் பொருள் என்ன?

Answer : உண்மையை மட்டுமே பேசுதல்

18. வர்த்தமானர் என்பதன் பொருள் யாது?

Answer : செழிப்பு

19. மோட்சம் என்றால் என்ன?

Answer : பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுதல்

20. ஆகம சித்தாந்தம் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?

Answer : மகாவீரரின் தலைமை சீடரான கௌதமசுவாமி

2

21. அகிம்சை என்பதன் பொருள் என்ன?

Answer : எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

22. மகாவீரரின் இயற்பெயர் யாது?

Answer : வர்த்தமானர்

23. மகாவீரரின் பெற்றோர் யாவர்?

Answer : சித்தார்த்தர், திரிசலா

24. மகாவீரர் எங்கு பிறந்தார்?

Answer : வைசாலிக்கு அருகேயுள்ள குந்த கிராமம், பீகார்

25. அபரிக்கிரகா என்பதன் பொருள் என்ன?

Answer : பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது

26. மகாவீரர் போதித்த ஐந்து கொள்கைகள் யாவை?

Answer : அகிம்சை, சத்யா, அஸ்தேய, அபரிக்கிரகா, பிரம்மச்சரியா

27. வைதீக பழமைவாத போக்குடைய சீடர்கள் சமண மதத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?

Answer : திகம்பரர்

28. அஸ்தேய ‌ என்பதன் பொருள் என்ன?

Answer : திருடாமை

29. மகாவீரர் எவற்றின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்?

Answer : சிரமானிய மரபுகளின் அடிப்படையில்

30. சமண மதம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது?

Answer : இரண்டு பிரிவுகள்(திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்)

3

31. மகாவீரர் எத்தனை ஆண்டு கால கடுமையான தவத்திற்கு பின்னர் கைவல்ய எனும் எல்லையற்ற அறிவு நிலையை அடைந்தார்?

Answer : பன்னிரண்டரை ஆண்டுகாலம்

32. பிரம்மச்சரியா என்பதன் பொருள் என்ன?

Answer : திருமணம் செய்து கொள்ளாமை

33. திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் யாவை?

Answer : நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்

34. சித்தார்த்தர் கயாவில் தவமிருந்து எத்தனையாம் நாளில் ஞானம் பெற்று புத்தர் ஆனார்?

Answer : 49ம் நாள்

35. ஹீனயான பௌத்த பிரிவினர் எதனை தங்களின் நோக்கமாக கருதினர்?

Answer : தனிமனிதர்கள் முக்தி அடைவது

36. புத்தரின் உருவங்களை வணங்கியவர்கள் யார்?

Answer : மகாயான பௌத்த பிரிவு

37. ஹீனயான பௌத்த பிரிவினர் எந்த மொழியை பயன்படுத்தினர்?

Answer : பிராகிருதம்

38. புத்தரின் சிலை சிலையையோ உருவப் படங்களையோ வணங்காதவர்கள் யார்?

Answer : ஹீனயான பௌத்த பிரிவு

39. ஆசான் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?

Answer : Preceptor

40. அஜந்தா குகை ஓவியங்கள் எங்கு உள்ளன?

Answer : மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்

4

41. புத்தர் எங்கு பிறந்தார்?

Answer : லும்பினி தோட்டம், நேபாளம்

42. விகாரைகள் என்றால் என்ன?

Answer : மடாலயங்கள் அல்லது துறவிகள் வாழும் இடம்

43. புத்தர் எவற்றை எதிர்த்தார்?

Answer : சடங்குகள் மற்றும் வேள்விகள்

44. புத்தர் என்ற சொல்லின் பொருள் யாது?

Answer : ஞானம் பெற்ற ஒருவர்

45. பௌத்த மதம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது?

Answer : இரண்டு பிரிவுகள்(ஹீனயானம், மகாயானம்)

46. எந்த நிலையை அடைவதே வாழ்க்கையின் இறுதி 'நோக்கம் என்று புத்தர் வலியுறுத்தினார்?

Answer : நிர்வாண நிலை

47. புத்தர் தன்னுடைய எத்தனையாம் வயதில் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் மேற்கொண்டார்?

Answer : 29 ம் வயது

48. ஸ்தூபி என்றால் என்ன?

Answer : புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம்

49. புத்தர் தனது கருத்துக்களை பரப்புவதற்காக எவற்றை நிறுவினார்?

Answer : சங்கம்

50. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

Answer : புத்தர்

5

51. பௌத்த மதத்தை நிறுவியவர் யார்?

Answer : கௌதம புத்தர்

52. புத்தர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : தர்ம சக்ர பரிவர்த்தனா அல்லது தர்ம சக்கரத்தை நகர்த்துதல்

53. பௌத்த கோயில் அல்லது தியான கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

Answer : சைத்தியம்

54. எந்த மலையின் ஒரு பகுதியில் பாண்டவர் படுக்கை என்று அழைக்கப்படும் சமணர் குகைகள் உள்ளன?

Answer : கலிஞ்சமலை

55. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்லும் வழியில் எந்த சமணப் பெண் துறவியால் அவர்கள் ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது?

Answer : கவுந்தியடிகள்

56. எங்கு சமணர்மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது?

Answer : மதுரை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கீழக்குயில்குடி கிராமம்

57. துன்பம் மற்றும் பிறப்பில் இருந்து விடுதலை (நிர்வாண நிலை) என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?

Answer : Nirvana

58. பௌத்தமதம் எந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது?

Answer : கர்மா

59. கான்பூசியஸின் (குங் பு த்சே) கொள்கைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது?

Answer : சீனா (கான்பூசியனிசம்)

60. புத்தர் எங்கு தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்தினார்?

Answer : வாரணாசிக்கு அருகே உள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள மான் பூங்கா

6

61. கௌதம புத்தர் எந்த அரச வம்சத்தை சேர்ந்தவர்?

Answer : சாக்கிய அரச வம்சம்

62. மகாயானம் எந்தெந்த நாடுகளுக்கு பரவியது?

Answer : மத்திய ஆசியா, இலங்கை, பர்மா, நேபாளம், திபெத், சீனா, ஜப்பான்

63. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கிராமம் முன்னர் ஜைனக் காஞ்சி என அழைக்கப்பட்டுள்ளது?

Answer : திருப்பருத்திக்குன்றம்

64. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஜைனம் என்ற வார்த்தை எதனை குறிப்பிடுகிறது?

Answer : சமணம்

65. மணிமேகலையில் தமிழகத்தின் எந்த நகரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?

Answer : காஞ்சிபுரம்

66. ஜெராஸ்டரின் கொள்கைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டது?

Answer : பாரசீகம் (ஜெராஸ்டிரியனிசம்)

67. மகாயான பௌத்த பிரிவினர் எந்த மொழியைப் பயன்படுத்தினர்?

Answer : சமஸ்கிருத மொழி

68. சடலம் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?

Answer : Corpse

69. புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் எந்த விதிகளை நம்பினார்?

Answer : பிரபஞ்ச விதிகள்

70. தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் சமண மடாலயங்கள் இருந்துள்ளன?

Answer : புகார், உறையூர், மதுரை, வஞ்சி (கருவூர்), காஞ்சிபுரம்

7

71. முதலாவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம் எது?

Answer : இராஜகிருகம்

72. ஹீனயான பௌத்த பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer : தேரவாதம்

73. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை எந்த மத இலக்கியம்?

Answer : பௌத்தமதம்

74. மூடநம்பிக்கைகள் என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் யாது?

Answer : Superstitious beliefs

75. எந்த அரசரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள எந்த அரசரால் ஸ்தூபியை காஞ்சிபுரத்தில் பார்த்ததாக யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார்?

Answer : அசோகர்

76. ஜாதகக் கதைகள் எந்த மதத்துடன் தொடர்புடையது?

Answer : பௌத்தமதம்

77. பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் ஆகியோர் எந்த ஊரை சேர்ந்தவர்கள்?

Answer : காஞ்சிபுரம்

8

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share