6 ம் வகுப்பு - வரலாறு என்றால் என்ன

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. எந்த போருக்குப்பின் அசோகர் போர் தொடுப்பதை கைவிட்டார்?

Answer : கலிங்கப்போர்

2. முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு எதை நாம் தெரிந்து கொள்ளலாம்?

Answer : வாழ்ந்த காலமும், வாழ்க்கை நிகழ்வுகளையும்

3. வரலாறு என்பது எதன் பதிவு?

Answer : கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசை

4. பழங்காலத்தில் மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்கிறோம்?

Answer : பாறை ஓவியங்கள் மூலம்

5. வெற்றிக்குப்பின் போரைத் துறந்த முதல் அரசன் யார்?

Answer : அசோகர்

6. பழங்கால மனிதர்கள் தாங்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும் வேட்டையாடுவற்கும் பழகிய விலங்கு எது?

Answer : நாய்

7. நாணயம் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையின் பெயர் என்ன?

Answer : நாணயவியல்

8. தொல்லியல் அடையாளங்களிலிருந்து நாம் பெறுவது யாது?

Answer : வரலாற்றுத் தரவுகள்

9. அசோகர் எந்தப் போரில் பல உயிர்கள் மடிவதைக் கண்டு மிகவும் வருந்தினார்?

Answer : கலிங்கப் போர்

10. பழங்கால மனிதர்களின் முக்கிய தொழில் என்ன?

Answer : வேட்டையாடுதல்

1

11. பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்றவர் யார்?

Answer : அசோகர்

12. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள சக்கரம் சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது எனில் இதன் மூலம் யாருடைய முக்கியத்துவத்தை நாம் அறியலாம்?

Answer : அசோகர்

13. கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறையின் பெயர் என்ன?

Answer : கல்வெட்டியல்

14. அசோகர் புத்த மதத்தை தழுவி அதற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்ததற்கான காரணமென்ன?

Answer : அமைதியையும், அறத்தையும் பரப்ப

15. தம்மா என்பதன் பொருள் என்ன?

Answer : அறநெறி

16. கற்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடிப்பதற்கும் இடைப்பட்ட காலம் எது?

Answer : வரலாற்றுக்கு முந்தைய காலம்

17. 'தம்மா'என்பது எம்மொழிச் சொல்?

Answer : பிராகிருதம்

18. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?

Answer : விசாரிப்பதன் மூலம் கற்றல்

19. சாரநாத் கற்றூண் யார் நிறுவியது?

Answer : அசோகர்

20. வரலாற்றின் காலம் எதில் கணக்கிடப்படுகிறது?

Answer : ஆண்டுகளில்

2

21. வரலாறு என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

Answer : கிரேக்கம்

22. பாறை ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளன?

Answer : குகைச் சுவர்கள்

23. அசோகர் கலிங்கப் போருக்குப் பின் எந்த மதத்தை பின்பற்றினார்?

Answer : புத்த மதம்

24. வரலாறு என்ற சொல் எந்த கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?

Answer : இஸ்டோரியா

25. பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளுக்குள் எதிர்பாராமல் நுழைவது?

Answer : கொடிய விலங்குகள்

26. 'தம்மா' என்பது தர்மா என எதில் கூறப்பட்டுள்ளது?

Answer : சமஸ்கிருதம்

27. பாறை ஓவியம் வரையப்பட்டதன் நோக்கம் என்ன?

Answer : வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக

28. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவிகளின் பெயர் என்ன?

Answer : கற்கருவிகள்

29. வேட்டைக்குப் போக இயலாதவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பதை எப்படிக் காட்டினார்கள்?

Answer : பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் ஓவியங்களைத் தீட்டி

30. யாருடைய ஆட்சிக் காலத்தின் போது புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவியது?

Answer : அசோகர்

3

31. பண்டைய மனிதர்கள் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உருவாக்கியவை என கருதப்படுவது எது?

Answer : பாறை ஓவியங்கள்

32. பொ.ஆ.மு என்பதன் விரிவாக்கம் என்ன?

Answer : பொது ஆண்டிற்கு முன்

33. உலகிலேயே விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்?

Answer : அசோகர்

34. அசோகர் உருவாக்கியதில் இன்றும் நாம் பயன்படுத்துவது எது?

Answer : சாலைகள்

35. பழங்கால மனிதர்கள் உடன் எப்போதும் திரியும் விலங்கு எது?

Answer : நாய்

36. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் எந்த கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது?

Answer : சாரநாத்

37. அசோகரின் சிறப்புகளை ஆய்வாளர்கள் எதன் மூலம் வெளிக் கொணர்ந்தனர்?

Answer : வரலாற்று ஆய்வுகள்

38. அசோகர் பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்ட ஆங்கிலேய எழுத்தாளர் யார்?

Answer : சார்லஸ் ஆலன்

39. அசோகர் குறித்த தகவல்கள் வரலாற்று பக்கங்களில் எந்த நூற்றாண்டு வரை இடம்பெறவில்லை?

Answer : 20ஆம் நூற்றாண்டு

40. அசோகரின் சிறப்புகளை வெளிக் அசோகரின் சிறப்புகளை வெளிக்கொண்டுவர யாருடைய ஆய்வுகள் பயன்பட்டன?

Answer : வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்

4

41. அசோகரின் பொற்கால ஆட்சி குறித்து செய்திகளின் சான்றுகள் எங்கு காணப்படுகிறது?

Answer : சாஞ்சி ஸ்தூபி, சாரநாத் தூண்கள்

42. அசோகர் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூலின் பெயர் என்ன?

Answer : The Search for the India's Lost Emperor

43. கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்கள், செப்புப் பட்டயங்கள் வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டு பயணக்குறிப்புகள் நாட்டுப்புறக் கதைகள் எதற்காக உதவுகின்றன?

Answer : வரலாற்றைக் கட்டமைக்கவும் மறுசீரமைக்கவும்

44. வரலாற்றில் அரசர்கள் மற்றும் அவர்களின் ஆட்சி பற்றி நாம் எதன் மூலம் தெளிவாக உணரமுடியும்?

Answer : வரலாற்று ஆராய்ச்சிகள்

5

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share