1. அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
விளக்கம் : அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்: பொருள்களாகிய பிற வகைச் செயல்கள் எல்லாம் இழிந்தவரிடத்தில் உள்ளனவே.
2. நல்லற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.
விளக்கம் : நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.
3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
விளக்கம் : இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள பொருந்தியநெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.
4. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
விளக்கம் : நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.
5. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
விளக்கம் : அ-ருள் கொண்-ட-வ-ரா-க வாழ்-ப-வர்-க-ளுக்-கு -எந்-தத் துன்--ப-மு-மே இல்-லை; காற்-று உயிர் வழங்-கு--தலால் வா-ழும் வள-மா-ன -ப-ரி-ய உ-ல-க-மே இ-தற்-குச் சான்-று.
6. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
விளக்கம் : அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.
7. அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.
விளக்கம் : பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழக்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும்.
8. பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
விளக்கம் : பொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.
9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
விளக்கம் : அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே.
10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியோர்மேல் செல்லும் இடத்து.
விளக்கம் : தன்னைவிட மெலிவானர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.
1