பொருட்பால் - பேதைமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுஊதியம் போக விடல்.

விளக்கம் : "பேதைமை" என்பதன் தன்மை என்னவென்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.

2. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

விளக்கம் : பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

விளக்கம் : பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும் பேதையரது தொழிலாகும்.

4. ஓதி உணர்ந்தும் பிறர்குரைத்தும் தான்அடங்காப்
பேதையிற் பேதையர் இல்.

விளக்கம் : நூல்களை முறையாகப் படித்து உணர்ந்தும், பிறர்க்கும் அதை சொல்லி வந்தும், தன் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும் பெரிய பேதையர் உலகில் எவரும் இல்லை.

5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

விளக்கம் : இந்தப் பிறப்பில் பேதமைச் செயல்களையே செய்து வரும் பேதை, தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

6. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

விளக்கம் : ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

விளக்கம் : பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

விளக்கம் : பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழி தவறி நடப்பான்.

9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.

விளக்கம் : ஒரு வகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். அது தான் அவனைப் பிரிந்தவிடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாதது.

10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

விளக்கம் : சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.

1

11. புல்லறிவாண்மை

விளக்கம் : Pullarivanmai

2

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share