12 ஆம் வகுப்பு - செய்யுள் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - கவிதைகள்

  Play Audio

1. இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற வரியை இயற்றியவர்?

Answer: நகுலன்

2. மூச்சும் நின்றுவிட்டால் பேச்சும் அடங்கும் என்ற வரியை இயற்றியவர்?

Answer: நகுலன்

3. ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம், மகா மௌனம் என்ற வரியை இயற்றியவர்?

Answer: நகுலன்

4. நகுலனின் இயற்பெயர்?

Answer: தி. கே. துரைசாமி

5. நகுலன் எங்கு பிறந்தார்?

Answer: கும்பகோணம்

6. நகுலன் எங்கு வாழ்ந்தார்?

Answer: திருவனந்தபுரம், கேரளா

7. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்?

Answer: நகுலன்

8. தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதிவந்தவர்?

Answer: நகுலன்

9. புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்?

Answer: நகுலன்

10. மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக கவிதையை வெளியிட்டவர்?

Answer: நகுலன்

1

11. நகுலன் எத்தனை புதினங்களை எழுதியுள்ளார்?

Answer: 7

12. பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer: நகுலன்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்