12 ஆம் வகுப்பு - இலக்கணம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - சிறுகை-அளாவிய-கூழ் - காப்பிய-இலக்கணம்

  Play Audio

1. காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

Answer: EPIC

2. EPIC என்ற சொல் எந்த மொழியில் இருந்து தோன்றியது?

Answer: கிரேக்க சொல்

3. EPOS என்பதற்கு பொருள்?

Answer: சொல் அல்லது பாடல்

4. காப்பியம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: காவியம்

5. ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய இலக்கிய நூல்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளன?

Answer: பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்

6. நன்னூலுக்கு எழுதியவர்?

Answer: மயிலைநாதர்

7. ஐம்பெருங்காப்பியங்கள் என்ற சொற்றொடரை தம் உரையில் கூறியவர் யார்?

Answer: மயிலைநாதர்

8. பஞ்ச காப்பியம் என்று எந்த நூலில் ஆசிரியர் கூறியுள்ளார்?

Answer: தமிழ்விடு தூது ஆசிரியர்

9. பெருங்காப்பியம் ஐந்து என்று அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்ட நூல்கள் எவை?

Answer: பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா

10. சிறுகாப்பியங்கள் ஐந்து என்னும் முறை யார் காலத்திற்கு முன்பே இருந்தது?

Answer: சி. வை. தாமோதரனார்

1

11. சூளாமணியை பதிப்பித்தவர் யார்?

Answer: சி. வை. தாமோதரனார்

12. காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்?

Answer: பொருட்தொடர்நிலைச்செய்யுள், கதைச் சொல்லல், தொடர்நடை செய்யுள், விருத்தச்செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகவியம்

13. நூல்கள் பிரிவு : காதை -

Answer: சிலப்பதிகாரம்

14. சருக்கம் -

Answer: சூளாமணி

15. இலம்பகம் -

Answer: சீவகசிந்தாமணி

16. படலம் -

Answer: கந்தபுராணம், கம்பராமாயணம்

17. காண்டம் -

Answer: சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

18. வடமொழியில் "காவ்யதரிசம்" என்ற நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்?

Answer: தண்டியலங்காரம்

19. "பாவியம் என்பது காப்பிய பண்பே" என்ற வரியை கூறிய நூல்?

Answer: தண்டியலங்காரம்

20. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்?

Answer: சீவகசிந்தாமணி

2

21. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது?

Answer: சிறுகாப்பியம்

22. "பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப" என்பது எந்த நூலின் பாவியம்?

Answer: கம்பராமாயணம்

23. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது எந்த நூலின் பாவிகம்?

Answer: சிலப்பதிகாரம்

24. அணிகளின் இலக்கணத்தை கூறும் முதன்மையானது?

Answer: தண்டியலங்காரம்

25. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிப்பது?

Answer: தொடர்நிலை

26. பொருள்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

27. சொல்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?

Answer: அந்தாதி இலக்கியங்கள்

28. விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை?

Answer: சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

29. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுளில் அமைந்தது?

Answer: சிலப்பதிகாரம்

30. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலாக்கணங்களுள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டதைக் ----- என்பர்?

Answer: குறுங்காப்பியம் அல்லது குறுங்கவியம்

3

31. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: பாரதியார்

32. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: பாரதிதாசன்

33. ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் போன்ற நூல்களை எழுதியவர்?

Answer: கண்ணதாசன்

34. பராசக்தி மகா காவியம் என்ற நூல் எழுதியவர்?

Answer: கவியோகி சுத்தானந்த பாரதியார்

35. இராவண காவியம் என்ற நூலை எழுதியவர்?

Answer: புலவர் குழந்தை

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்