12 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் நான்கு - செல்வத்துள்-எல்லாம்-தலை - புறநானூறு

  Play Audio

1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளை சிறப்பித்து கூறுவது?

Answer: பாடாண் திணை

2. பரிசில் துறை என்பது என்ன?

Answer: பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

3. வாயிலோயே என்பதன் பொருள் என்ன?

Answer: வாயில் காப்போனே

4. வள்ளியோர் என்பதன் பொருள் என்ன?

Answer: வள்ளல்கள்

5. வயங்குமொழி என்பதன் பொருள் என்ன?

Answer: விளங்கும் சொற்கள்

6. வித்தி என்பதன் பொருள் என்ன?

Answer: விதைத்து

7. உள்ளியது என்பதன் பொருள் என்ன?

Answer: நினைத்தது

8. உரன் என்பதன் பொருள் என்ன?

Answer: வலிமை

9. கலன் என்பதன் பொருள் என்ன?

Answer: யாழ்

10. கலப்பை என்பதன் பொருள் என்ன?

Answer: கருவிகளை வைக்கும் பை

1

11. மழு என்பதன் பொருள் என்ன?

Answer: கோடரி

12. ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினார்?

Answer: அதியமான் நெடுமான் அஞ்சி

13. புறநானூறு வேறு பெயர்கள் என்ன?

Answer: புறம், புறப்பாட்டு

14. தமிழரின் போர், வீரம், நாகரீகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைப்பது எது?

Answer: புறநானூறு

15. அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் யார்?

Answer: ஒளவையார்

16. ஒளவையார் புறநானூற்றில் எத்தனை பாடல்களைப் படியுள்ளார்?

Answer: 33

2

17. ஒளவையார் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை கிடைத்துள்ளன?

Answer: 59 பாடல்கள்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்