12 ஆம் வகுப்பு - செய்யுள் - மனிதம்-ஆளுமை - இயல் எட்டு - எல்லா-உயிரும்-தொழும் - இரட்சணிய-யாத்ரிகம்

  Play Audio

1. உன்னலிர் என்பதன் பொருள் என்ன?

Answer: எண்ணாதீர்கள்

2. பிணித்தமை என்பதன் பொருள் என்ன?

Answer: கட்டியமை

3. நீச என்பதன் பொருள் என்ன?

Answer: இழிந்த

4. நேசம் என்பதன் பொருள் என்ன?

Answer: அன்பு

5. வள்ளியதை என்பதன் பொருள் என்ன?

Answer: உறுதியை

6. ஒர்மின் என்பதன் பொருள் என்ன?

Answer: ஆராய்ந்து பாருங்கள்

7. பாதகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கொடியவர்

8. குழுமி என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒன்றுகூடி

9. பொழிப்புரை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: இகழ்ச்சியுறை

10. ஏதமில் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: குற்றமில்லாத

1

11. ஊன்றஎன்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: அழுந்த

12. மாற்றம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: சொல்

13. நுவன்றிலர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கூறவில்லை

14. ஆக்கினை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: தண்டனை

15. நிண்ணயம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: உறுதி

16. கூவல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கிணறு

17. ஒண்ணுமோ என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: முடியுமோ

18. உததி என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கடல்

19. ஒடுக்க என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: அடக்க

20. களைந்து என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கழற்றி

2

21. திகழ என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: விளங்க

22. சேர்த்தினர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: உடுத்தினர்

23. சிரத்து என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: தலையில்

24. பெய்தனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வைத்து அழுதனர்

25. கைதூறும் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கையில் கொடுத்திருந்த

26. கண்டகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கொடியவர்கள்

27. வெய்துற என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வலிமை மிக

28. வைதனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: திட்டினர்

29. மறங்கொள் என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: முரட்டுத் தன்மையுள்ளவர்

30. மேதினி என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: உலகம்

3

31. கீண்டு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பிளந்து

32. வாரிதி என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கடல்

33. சுவறாதது -

Answer: வற்றாதது

34. வல்லானை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: வலிமை வாய்ந்தவரை

35. நிந்தை என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: பழி

36. பொல்லாங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer: கெடுதல், தீமை

37. இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர்?

Answer: எச். ஏ. கிருட்டிணனார்

38. இறைமகனை கொள்ள யார் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள்?

Answer: போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரிடம்

39. இறைமகனை இழுத்து சென்ற அக்கொடியவர்கள், அவர் அணிந்திருந்த வெள்ளாடையை கழற்றிவிட்டு எந்த அங்கியை அவருக்கு போர்த்தினர்?

Answer: முருக்க மலர் போன்று சிவந்த அங்கி

40. கருத்தடம், வெங்குருதி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பண்புத்தொகை

4

41. வெந்து, சினந்து, போந்து என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினையெச்சங்கள்

42. உன்னலிர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: முன்னிலைப் பன்மை வினைமுற்று

43. ஒர்மின் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: ஏவல் பன்மை வினைமுற்று

44. சொற்ற, திருந்திய என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: பெயரெச்சங்கள்

45. பாதகர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினையாலணையும் பெயர்

46. ஊன்ற ஊன்ற என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: அடுக்குத்தொடர்

47. எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

Answer: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த "நற்போதகம்"

48. இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

Answer: 1894 ஆண்டு மே திங்கள்

49. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்க்ரிம்ஸ புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக தமிழில் படைக்கப்பட்ட நூல்?

Answer: இரட்சணிய யாத்திரிகம்

50. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை கொண்டது?

Answer: 3766பாடல்கள்

5

51. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்டது?

Answer: 5 பருவம்

52. போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களை எழுதியுள்ளவர்?

Answer: எச். ஏ. கிருட்டிணனார்

53. கிறித்துவ கம்பர் என அழைக்கப்படுபவர்?

Answer: எச். ஏ. கிருட்டிணனார்

6

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்