6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - மூதுரை

  Play Audio

1. அழியாச் செல்வம் எது?

Answer: கல்வி

2. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்" என்ற மூதுரை பாடலைப் பாடியவர் யார்?

Answer: ஒளவையார்

3. மாசற என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: குற்றம் இல்லாமல்

4. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒப்பிட்டு ஆராய்தல்

5. தேசம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: நாடு

6. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

Answer: ஒளவையார்

7. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ஒளவையார்

8. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: மூத்தோர் கூறும் அறிவுரை

9. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

Answer: 31

10. மாணவர்கள் நூல்களை ----- கற்க வேண்டும்?

Answer: மாசற

1

11. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: இடம் + எல்லாம்

12. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: மாசு + அற

13. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: குற்றமில்லாதவர்

14. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: சிறப்புடையார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்