6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - எல்லாரும்-இன்புற - பெயர்ச்சொல்

  Play Audio

1. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்?

Answer: பெயர்ச்சொல்

2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

Answer: ஆறு (பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்)

3. பொருளைக் குறிக்கும் பெயர்?

Answer: பொருட்பெயர் (எடுத்துக்காட்டு) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி

4. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர்?

Answer: இடப்பெயர் (எடுத்துக்காட்டு) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு

5. காலத்தைக் குறிக்கும் பெயர்?

Answer: காலப்பெயர் (எடுத்துக்காட்டு) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு

6. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்?

Answer: சினைப்பெயர் (எடுத்துக்காட்டு) கண், கை, இலை, கிளை

7. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்?

Answer: பண்புப்பெயர் (எடுத்துக்காட்டு) வட்டம், சதுரம், செம்மை, நன்மை

8. தொழிலைக் குறிக்கும் பெயர்?

Answer: தொழிற்பெயர் (எடுத்துக்காட்டு) படித்தல், ஆடுதல், நடித்தல்

9. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்: - காவியா புத்தகம் படித்தாள்

Answer: பொருட்பெயர்

10. காவியா பள்ளிக்குச் சென்றாள்

Answer: இடப்பெயர்

11. காவியா மாலையில் விளையாடினாள்

Answer: காலப்பெயர்

12. காவியா தலை அசைத்தாள்

Answer: சினைப்பெயர்

13. காவியா இனிமையாகப் பேசுவாள்

Answer: பண்புப்பெயர்

14. காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும்

Answer: தொழிற்பெயர்

1

15. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்?

Answer: இரண்டு (இடுகுறிப்பெயர், காரணப்பெயர்)

16. நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வா்வாறு வழங்கிய பெயர்கள்?

Answer: இடுகுறிப்பெயர்கள் (எடுத்துக்காட்டு) மண், மரம், காற்று

17. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர்)

18. ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது ----- எனப்படும்?

Answer: இடுகுறிப் பொதுப்பெயர் (எடுத்துக்காட்டு) மரம், காடு

19. . ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ----- எனப்படும்?

Answer: இடுகுறிச் சிறப்புப்பெயர் (எடுத்துக்காட்டு) மா, கருவேலங்காடு

20. காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் ----- எனப்படும்?

Answer: காரணப்பெயர் (எடுத்துக்காட்டு) நாற்காலி, கரும்பலகை

21. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்?

Answer: இரண்டு (காரணப் பொதுப்பெயர், காரணப் சிறப்புப்பெயர்)

22. காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, எனப்படும்?

Answer: காரணப்பொதுப்பெயர் (எடுத்துக்காட்டு) பறவை, அணி

23. குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது ----- ஆகும்?

Answer: காரணச்சிறப்புப்பெயர். (எடுத்துக்காட்டு) வளையல், மரங்கொத்தி

24. இடுகுறிப்பெயரை வட்டமிடுக? அ) பறவை, ஆ) மண், இ) முக்காலி, ஈ) மரங்கொத்தி

Answer: ஆ) மண்

2

25. காரணப்பெயரை வட்டமிடுக? அ) மரம், ஆ) வளையல், இ) சுவர், ஈ) யானை

Answer: ஆ) வளையல்

26. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக? அ) வயல், ஆ) வாழை, இ) மீன்கொத்தி, ஈ) பறவை

Answer: ஆ) வாழை

27. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; என்ற பாடலின் ஆசிரியர்?

Answer: அ. முத்தரையனார், மலேசியக் கவிஞர்

28. கலைச்சொல் அறிவோம்: - அறக்கட்டளை

Answer: Trust

29. தன்னார்வலர்

Answer: Volunteer

30. இளம் செஞ்சிலுவைச் சங்கம்

Answer: Junior Red Cross

31. சாரண சாரணியர்

Answer: Scouts & Guides

32. சமூகப் பணியாளர்

Answer: Social Worker

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்