6 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - மனிதம்-ஆளுமை - இயல் ஒன்பது - இன்னுயிர்-காப்போம் - ஆசியஜோதி

  Play Audio

1. உலக உயிர்கர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?

Answer: புத்தர்

2. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் யார்?

Answer: புத்தர்பிரான்

3. புத்தர் எந்த மன்னனுக்கு "உயிர் கொல்லாமை" பற்றி அறிவுரை கூறினார்?

Answer: பிம்பிசார மன்னன்

4. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: கவிமணி தேசிக விநாயகனார்

5. அஞ்சினர் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பயந்தனர்

6. கருணை என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: இரக்கம்

7. வீழும் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: விழும்

8. ஆகாது என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: முடியாது

9. நீள்நிலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பரந்த உலகம்

10. முற்றும் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: முழுவதும்

1

11. மாரி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: மழை

12. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வயிறு

13. பூதலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பூமி

14. பார் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: உலகம்

15. ஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன?

Answer: பிம்பிசார மன்னன்

16. ஆசிய ஜோதி நூலின் ஆசிரியர் யார்?

Answer: கவிமணி தேசிக விநாயகனார்

17. தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்?

Answer: இருபதாம் நூற்றாண்டு

18. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்?

Answer: 36 ஆண்டுகள்

19. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

Answer: தேசிக விநாயகனார்

20. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலை எழுதியவர் யார்?

Answer: எட்வின் அர்னால்டு

2

21. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?

Answer: புத்தர் வரலாறு

22. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?

Answer: லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)

23. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

Answer: ஆசிய ஜோதி

24. நேர்மையான வாழ்வை வாழ்பவர் யார்?

Answer: எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

25. ஒருவருக்கு செய்யக் கூடாத செயல் எது?

Answer: தீவினை

26. 'எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: எளிது + ஆகும்

27. ’பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: பாலை + எல்லாம்

28. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: இன்னுயிர்

29. மலை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: மலையெல்லாம்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்