1. உலக உயிர்கர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?
Answer: புத்தர்
2. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் யார்?
Answer: புத்தர்பிரான்
3. புத்தர் எந்த மன்னனுக்கு "உயிர் கொல்லாமை" பற்றி அறிவுரை கூறினார்?
Answer: பிம்பிசார மன்னன்
4. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: கவிமணி தேசிக விநாயகனார்
5. அஞ்சினர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பயந்தனர்
6. கருணை என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: இரக்கம்
7. வீழும் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: விழும்
8. ஆகாது என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: முடியாது
9. நீள்நிலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பரந்த உலகம்
10. முற்றும் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: முழுவதும்
1
11. மாரி என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: மழை
12. கும்பி என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: வயிறு
13. பூதலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பூமி
14. பார் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: உலகம்
15. ஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன?
Answer: பிம்பிசார மன்னன்
16. ஆசிய ஜோதி நூலின் ஆசிரியர் யார்?
Answer: கவிமணி தேசிக விநாயகனார்
17. தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்?
Answer: இருபதாம் நூற்றாண்டு
18. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்?
Answer: 36 ஆண்டுகள்
19. கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?
Answer: தேசிக விநாயகனார்
20. லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: எட்வின் அர்னால்டு
2
21. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்?
Answer: புத்தர் வரலாறு
22. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
Answer: லைட் ஆஃப் ஆசியா (Light of Asia)
23. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது?
Answer: ஆசிய ஜோதி
24. நேர்மையான வாழ்வை வாழ்பவர் யார்?
Answer: எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
25. ஒருவருக்கு செய்யக் கூடாத செயல் எது?
Answer: தீவினை
26. 'எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: எளிது + ஆகும்
27. ’பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: பாலை + எல்லாம்
28. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: இன்னுயிர்
29. மலை + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: மலையெல்லாம்
3