1. "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இது"என்று பாடல்வரியை இயற்றியவர் யார்?
Answer: மீரா
2. சீவன் என்பதன் பொருள் என்ன?
Answer: உயிர்
3. சத்தியம் என்பதன் பொருள் என்ன?
Answer: உண்மை
4. ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் என்ன?
Answer: மகிழ்வான காட்சி
5. வையம் என்பதன் பொருள் என்ன?
Answer: உலகம்
6. சபதம் என்பதன் பொருள் என்ன?
Answer: சூளுரை
7. மோகித்து என்பதன் பொருள் என்ன?
Answer: விரும்பி
8. மீராவின் இயற்பெயர் என்ன?
Answer: மீ. இராஜேந்திரன்
9. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்?
Answer: மீரா
10. மீரா அவர்கள் என்ன பணியாற்றினார்?
Answer: கல்லூரி பேராசிரியர்
1
11. ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?
Answer: மீரா
12. விடுதலை திருநாள் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: கோடையும் வசந்தமும்
13. கோடையும் வசந்தமும் என்ற நூலினை எழுதியவர்?
Answer: மீரா
14. விடுதலை திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் யார்?
Answer: பகத்சிங்
15. வானில் முழுநிலவு அழகாகத் ----- அளித்தது?
Answer: தரிசனம்
16. இந்த ----- முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு?
Answer: வையம்
17. சீவனில்லாமல்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: சீவன் + இல்லாமல்
18. விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: விலங்கு + ஒடித்து
19. காட்டை + எரித்து என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: காட்டையெறித்து
20. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: இதந்தரும்
2