6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - தமிழ்த்தேன் - வளர்தமிழ்

  Play Audio

1. உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?

Answer: ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவை

2. மனிதனை பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது?

Answer: மொழி

3. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது?

Answer: மொழி

4. தமிழில் மிகப் பழமையான நூல் எது?

Answer: தொல்காப்பியம்

5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?

Answer: பாரதியார்

6. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்?

Answer: பாரதியார்

7. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து?

Answer: உயிர்மெய்

8. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே அமையும்?

Answer: வலஞ்சுழி

9. வலஞ்சுழி எழுத்துக்கள் எவை?

Answer: அ, எ, ஒள, ண, ஞ

10. இடஞ்ச்சுழி எழுத்துக்கள் எவை?

Answer: ட, ய, ழ

1

11. "தமிழின் கிளவியும் அதனோ ரற்றே" தமிழ் என்ற சொல்லை குறிப்பிடும் நூல் எது?

Answer: தொல்காப்பியம்

12. தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: தொல்காப்பியம்

13. தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: சிலப்பதிகாரம்

14. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

15. தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: அப்பர் தேவாரம்

16. "தமிழன் கண்டாய்" என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

Answer: அப்பர் தேவாரம்

17. சீர்மை என்பது எதனை குறிக்கும்?

Answer: ஒழுங்கு முறை

18. அல் + திணை என்பதன் பொருள் என்ன?

Answer: உயர்வு அல்லாத திணை

19. திணைகள் எத்தனை?

Answer: இரண்டு (உயர்திணை, அஃறிணை)

20. பாகற்காய் என்பதன் பொருள் என்ன?

Answer: பாகு அல்லாத காய்

2

21. பாகற்காய் எவ்வாறு பிரிவும்?

Answer: பாகு + அல் + காய்

22. தமிழ்மொழியில் பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது?

Answer: சொற்பிறப்பு

23. தமிழில் மிகுந்துள்ள நூல்கள் எவை?

Answer: தொல்காப்பியம், நன்நூல்

24. சங்க இலக்கியங்கள் எவை?

Answer: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

25. தமிழில் உள்ள அறநூல்கள் எவை?

Answer: திருக்குறள், நாலடியார்

26. பூப்பது முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு?

Answer: 7

27. "மா" என்ற சொலின் பொருள் என்ன?

Answer: மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

28. பூவின் ஏழு நிலைகள் எவை?

Answer: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

29. தமிழின் தற்போதைய வளர்ச்சி என்ன?

Answer: அறிவியல் தமிழ், கணினி தமிழ்

30. ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: இலை

3

31. அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: கீரை

32. அருகு, கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: புல்

33. நெல், வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: தாள்

34. மல்லி செடியின் இலைப்பெயர் என்ன?

Answer: தழை

35. சப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: மடல்

36. கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?

Answer: தோகை

37. பனை, தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன?

Answer: ஓலை

38. கமுகு மரத்தின் இலைப்பெயர் என்ன?

Answer: கூந்தல்

39. தமிழ் எண்கள்

Answer: 1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சா, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - க0

4

40. தமிழின் சிறப்பு பெயர் என்ன?

Answer: முத்தமிழ்

41. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?

Answer: இசைதமிழ்

42. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?

Answer: இயல் தமிழ்

43. நாடகத்தமிழ் எதை நல்வழிப்படுத்தும்?

Answer: உணர்வில் கலந்த வாழ்வை

44. சமூக ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது தமிழ்மொழி?

Answer: செய்தித்தாள், தொலைக்காட்சி

45. கணினி மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல் எது?

Answer: தொல்காப்பியம், நன்நூல்

46. தமிழ்க் கவிதை வடிவங்கள் எவை?

Answer: துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்

47. தமிழ் உரைநடை வடிவங்கள் எவை?

Answer: கட்டுரை, புதினம், சிறுகதை

48. வேளாண்மை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: கலித்தொகை - 101, திருக்குறள் - 81

49. உழவர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: நற்றிணை - 4

5

50. பாம்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: குறுந்தொகை - 239

51. வெள்ளம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: பதிற்றுப்பத்து - 15

52. முதலைஎன்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: குறுந்தொகை - 324

53. கோடை என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: அகநானூறு - 42

54. உலகம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுப்படை - 1

55. மருந்து என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: அகநானூறு - 147, திருக்குறள் - 952

56. ஊர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், அகத்திணையியல் - 41

57. அன்பு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், களவியல் - 110, திருக்குறள் - 84

58. உயிர் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்

59. மகிழ்ச்சி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், கற்பியல், திருக்குறள்

6

60. மீன் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: குறுந்தொகை

61. புகழ் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், வேற்றுமையியல் - 71

62. அரசு என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: திருக்குறள் - 554

63. செய் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: குறுந்தொகை - 72

64. சொல் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், புறத்திணையியல் - 75

65. பார் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: பெரும்பாணாற்றுப்படை

66. ஒழி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், கிளவியாக்கம் - 48

67. முடி என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?

Answer: தொல்காப்பியம், வினையியல்

68. "நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: கவிஞர் அறிவுமதி

69. "வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

Answer: கவிஞர் அறிவுமதி

7

70. 'தொன்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பழமை

71. 'இடப்புறம்' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன?

Answer: இடம் + புறம்

72. 'சீரிளமை' என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன?

Answer: சீர்மை + இளமை

73. சிலம்பு + அதிகாரம் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: சிலப்பதிகாரம்

74. கணினி + தமிழ் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: கணினித்தமிழ்

75. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எதன் அடிப்படையில் வடிமைக்கப்பட வேண்டும்?

Answer: எண்கள்

8

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்