1. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல் உண்மையை கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
2. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆரறிவு வரை வகைப்படுத்தியவர் யார்?
Answer: தொல்காப்பியர்
3. "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: ஒளவையார்
4. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Answer: பதிற்றுப்பத்து
5. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Answer: நற்றிணை
6. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?
Answer: கலீலியோ
7. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: தொல்காப்பியம்
8. "கடல்நிர் முகந்த கமஞ்சூழ் எழிலி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: கார்நாற்பது
9. "நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: பதிற்றுப்பத்து
10. "கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: நற்றிணை
1
11. "திணையளவு போதச் சிறுபுல்நீர் நீண்ட பணையவு காட்டும்" என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்?
Answer: கபிலர்
12. தமிழ் பயின்ற குடியரசுத் தலைவர் யார்?
Answer: அப்துல்கலாம்
13. தமிழ் பயின்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்?
Answer: மயில்சாமி அண்ணாதுரை
14. இஸ்ரோவின் தலைவர் யார்?
Answer: சிவன்
2