10 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கலை-அழகியல்-புதுமைகள் - இயல் ஆறு - நிலா-முற்றம் - நிகழ்கலை

  Play Audio

1. மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று எது?

Answer: கரகாட்டம்

2. பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது?

Answer: கரகாட்டம்

3. கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கரகம், கும்பாட்டம்

4. கரகச் செம்பில் எதனை நிரப்புகின்றனர்?

Answer: மணல், பச்சரிசி

5. கரகச் செம்பில் எந்த பொம்மையை வைத்து ஆடுகின்றார்?

Answer: கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை

6. கரகாட்டத்தில் எந்த இசை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?

Answer: நையாண்டி மேள இசையும், நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக் கருவிகள்

7. "நீரற வரியாகக் கரகத்து "என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: புறநானூறு

8. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று எது?

Answer: குடக்கூத்து

9. தமிழகத்தில் கரகாட்டம் நடைபெறும் மாவட்டங்கள் யாவை?

Answer: மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர், திருநெல்வேலி

10. கரகாட்டத்திற்கு அடிப்படை எனக் கருதப்படுவது?

Answer: குடக்கூத்து

1

11. மயில் வடிவுள்ள கூட்டுக்கு ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம்?

Answer: மயிலாட்டம்

12. நையாண்டி மேளம் இசைக்க, காலில் காட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் எது?

Answer: மயிலாட்டம்

13. கரகாட்டத்தின் துணையாட்டம் எது?

Answer: மயிலாட்டம்

14. கா என்பதற்கு ----- என்று பொருள்?

Answer: பாரந்தங்கும் கோல்

15. இருமுனைகளிலும் சம எடைகளை கட்டிய தண்டினை தோளில் சுமந்து ஆடுவது?

Answer: காவடியாட்டம்

16. காவடி அமைப்பிற்குரிய ஏற்ப எவ் வாறு எல்லாம் அழைக்கப்படுகிறது?

Answer: மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி

17. காவடியாட்டம் நிகழ்த்தப்படும் நாடுகள் யாவை?

Answer: இலங்கை, மலேசியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில்

18. ஒரே நிறுத் துணியை முண்டாசுபோலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் ஆட்டம் எது?

Answer: ஒயிலாட்டம்

19. ஒயிலாட்டத்தை யார் பெரும்பாலும் ஆடுகின்றனர்?

Answer: ஆண்கள்

20. ஒயிலாட்டத்திற்க்கு இசைக்கப்படும் இசைக்கருவி யாவை?

Answer: தோலால் கட்டப்படும் குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு

2

21. வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுவது எது?

Answer: தேவராட்டம்

22. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம் எது?

Answer: தேவராட்டம்

23. தேவராட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவி எது?

Answer: உறுமி (தேவதுந்துபி)

24. தேவதுந்துபி என அழைக்கப்படுவது எது?

Answer: உறுமி

25. தேவராட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும் என்ற பொது மரபு உள்ளது?

Answer: 8 முதல் 13 கலைஞர்கள்

26. எந்த ஆட்டத்திற்கு வேட்டி கட்டியும், தலையிலும் இடையிலும் சிறுதுனி கடியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் ஆடப்படும் ஆட்டம்?

Answer: தேவராட்டம்

27. தேவராட்டம் போன்ற ஆடப்பட்டு வருகின்ற கலை எது?

Answer: சேர்வையாட்டம்

28. சேர்வையாட்டத்தில் ஆட்டக்கலைஞர்கள் எந்தெந்த இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு ஆடுகின்றன?

Answer: சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா

29. இசைசார்புக் கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் ஆடப்படும் ஆட்டம் எது?

Answer: சேர்வையாட்டம்

30. "போலச் செய்தல்" என்ற பண்புகளை பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் ஒன்று?

Answer: பொய்க்கால் குதிரையாட்டம்

3

31. மரத்தாலான பொய்காலில் நின்றுக்கொண்டு குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டம்?

Answer: பொய்க்கால் குதிரையாட்டம்

32. அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் எது?

Answer: பொய்க்கால் குதிரையாட்டம்

33. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?

Answer: பொய்க்கால் குதிரையாட்டம்

34. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கருதப்படுகிறது?

Answer: மராட்டியர் காலத்தில்

35. பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கச்சிக்கொடி

36. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: குதிரைக்களி

37. எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை?

Answer: பொய்க்கால் குதிரையாட்டம்

38. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் கருவிகள் யாவை?

Answer: நாகசுரம், நையாண்டி மேளம்

39. 'தப்பு ' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலை?

Answer: தப்பாட்டம்

40. ஆண்கள் மட்டும் ஆடிவந்த எந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படும் ஆட்டம்?

Answer: தப்பாட்டம்

4

41. தப்பு ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Answer: தப்பாட்டம், தப்பட்டை, தப்பு

42. வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவியின் பெயர் என்ன?

Answer: தப்பு

43. தப்பாட்டம் எந்தெந்த நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது?

Answer: கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்

44. தப்பாட்டத்தை எவ்வாறு அழைப்பர்?

Answer: பறை

45. "தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக "என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: திருப்புகழ்

46. தப்பட்டதை பற்றி திருப்புகழில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

Answer: அருணகிரிநாதர்

47. ஒன்றை சொல்வதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி?

Answer: பறை

48. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருளில்களில் ஒன்றாக விளங்குவது எது?

Answer: பறை

49. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக விளங்குவது எது?

Answer: புலியாட்டம்

50. பாட்டும், வசனமமும் இல்லாத ஆட்டம் எது?

Answer: புலியாட்டம்

5

51. புலியாட்டத்தில் எத்தனை பேர் ஆடுவர்?

Answer: ஒருவர் அல்லது இருவர்

52. நாட்டுப்பற்று மக்களால் நிகழ்த்தப்படும் வரும் கலை எது?

Answer: தெருக்கூத்து

53. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுத்துவது எந்த ஆட்டம்?

Answer: தெருக்கூத்து

54. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது எது?

Answer: தெருக்கூத்து

55. ஒரு கதையை இசை, வசனம், பாடல், ஆடல், மெய்ப்பாடுடன் ஆடப்படும் கலை எது?

Answer: தெருக்கூத்து

56. தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவார் யார்?

Answer: கூத்தப்பட்டறை நா. முத்துசாமி என்ற கலைஞாயிறு

57. "நாடகக்கலையை மீட்டெடுக்கும்போது தமது குறிக்கோள்" என்றவர் யார்?

Answer: கூத்தப்பட்டறை நா. முத்துசாமி என்ற கலைஞாயிறு

58. தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் யார்?

Answer: கூத்துப்பட்டறை நா. முத்துசாமி

59. நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்?

Answer: கூத்துப்பட்டறை நா. முத்துசாமி

60. இந்தியாயாவிலும் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது?

Answer: கூத்துப்பட்டறை நா. முத்துசாமி

6

61. கூத்துப்பட்டறை நா. முத்துசாமி அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?

Answer: இந்தியா அரசின் தாமரைத்திரு விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது

62. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது?

Answer: தெருக்கூத்து

63. அருச்சுனன் தபசு எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது?

Answer: மழை வேண்டி

64. எந்த கலையை கதகளி போன்று மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது?

Answer: தெருக்கூத்து

65. தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுவுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீலும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும், பாடியும் காட்டுவது?

Answer: தோற்பாவைக் கூத்து

66. தோலால் ஆன பாவையைக்கொண்டு நிகழ்த்தப்படும் கலையாதலால் ----- என்னும் பெயர் பெற்றது?

Answer: தோற்பாவை

67. தோற்பாவை கூத்தில் என்ன என்ன இடம்பெறுகின்றன?

Answer: இசை, ஓவியம், நடனம், நாடகம், பல குரலில் பேசுதல்

68. தோற்பாவை கூத்தில் பாவையின் அசைவு, உரையாடல், இசை, ஆகியனவற்றோடு ----- முதன்மை பெறுகிறது?

Answer: ஒளியும்

69. மரப்பாவையைப் பற்றி கூறும் நூல் எது?

Answer: திருக்குறள்

70. பட்டினத்தார் பாடல்கள், திருவாசகப் பாடல்களிலும் எந்த கூத்து பற்றிய செய்திகள் காணமுடிகிறது?

Answer: தோற்பாவை கூத்து

7

71. ஊர் ஊராக சென்று நிகழ்த்துகின்ற கூட்டுகுடும்பக் கலையாக விளங்குவது?

Answer: தோற்பாவை கூத்து

72. தோற்பாவை கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது?

Answer: பொம்மலாட்டம், கையுறைப்பாவை கூத்து

73. மலேசியா தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எந்த மன்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

Answer: இராஜராஜ சோழன்

74. இராஜா சோழன் தெரு பற்றி கூறும் நூல் எது?

Answer: ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மலர்

8

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்