1. "நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: திருவிளையாடற் புராணம்
2. பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தமன்னன் யார்?
Answer: குசேலப்பாண்டியன்
3. கபிலரின் நண்பர் யார்?
Answer: இடைக்காடனார்
4. யாரை குசேலப்பாண்டியன் அவமதித்தான்?
Answer: இடைக்காடனார்
5. மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார்?
Answer: இறைவனிடம்
6. இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு எங்கு சென்று தங்கினார்?
Answer: வைத்திரு ஆலவாயில்
7. கேண்மையினான் என்பதன் பொருள் என்ன?
Answer: நட்பினன்
8. கேள்வியினால் என்பதன் பொருள் என்ன?
Answer: நூல் வல்லான்
9. தார் என்பதன் பொருள் என்ன?
Answer: மாலை
10. முனிவு என்பதன் பொருள் என்ன?
Answer: சினம்
1
11. தமர் என்பதன் பொருள் என்ன?
Answer: உறவினர்
12. அகத்து உவகை என்பதன் பொருள் என்ன?
Answer: மனமகிழ்ச்சி
13. நீபவனம் என்பதன் பொருள் என்ன?
Answer: கடம்பவனம்
14. மீனவன் என்பதன் பொருள் என்ன?
Answer: பாண்டிய மன்னன்
15. கவரி என்பதன் பொருள் என்ன?
Answer: சாமரை
16. நுவன்ற என்பதன் பொருள் என்ன?
Answer: சொல்லிய
17. ஏன்னா என்பதன் பொருள் என்ன?
Answer: அசைச் சொல்
18. பாண்டிய மன்னன் அணிந்திருந்த மாலை என்ன?
Answer: வேப்பம் பூ மாலை
19. கேள்வியினான் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினையாலணையும் பெயர்
20. காடனுக்கும் கபிலனுக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: எண்ணும்மை
2
21. பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை. சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும், சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான் என்று சினத்துடன் கூறியவர் யார்?
Answer: இடைக்காடனார்
22. இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்?
Answer: கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்
23. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?
Answer: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
24. மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூறு வரியை பாடியவர் யார்?
Answer: மோசிகீரனார்
25. திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?
Answer: பரஞ்சோதி முனிவர்
26. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
Answer: 3 (மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாயக் காண்டம்)
27. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
Answer: 64
28. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
Answer: திருமறைக்காடு (வேதாரண்யம்)
29. பரஞ்சோதி முனிவர் காலம் என்ன?
Answer: 17ஆம் நூற்றாண்டு
30. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer: வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா
31. மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் யார்?
Answer: பரஞ்சோதி முனிவர்
3