1. முல்லைப்பாட்டை படைத்தவர் யார்?
Answer: நப்பூதனார் (காவிரிப்பூம்பட்டினம் பொன்வணிகனார் மகன்)
2. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல், நோக்கி ஆய்மகள்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: முல்லைப்பாட்டு
3. "நன்னர் நன்மொழி கேட்டனம் " - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: முல்லைப்பாட்டு
4. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?
Answer: 103
5. முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது?
Answer: ஆசிரியப்பா
6. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
Answer: முல்லைப்பாட்டு
7. நனந்தலை உலகம் என்பதன் பொருள் என்ன?
Answer: அகன்ற உலகம்
8. நேமி என்பதன் பொருள் என்ன?
Answer: சக்கரம்
9. கோடு என்பதன் பொருள் என்ன?
Answer: மலை
10. கொடுஞ்செலவு என்பதன் பொருள் என்ன?
Answer: விரைவாக செல்லுதல்
11. நறுவீ என்பதன் பொருள் என்ன?
Answer: நறுமணமுடைய மலர்கள்
12. விரிச்சி என்பதன் பொருள் என்ன?
Answer: நற்சொல்
1
13. சுவல் என்பதன் பொருள் என்ன?
Answer: தோள்
14. தூஉய் என்பதன் பொருள் என்ன?
Answer: தூவி
15. மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: பண்புத்தொகை
16. உறுதுயர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: வினைத்தொகை
17. கைதொழுது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: மூன்றாம் வேற்றுமைத் தொகை
18. தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: உரிச்சொல் தொடர்
19. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: முல்லை
20. முல்லை நிலத்தில் பொழுதுகள் யாவை?
Answer: கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
21. முல்லை நிலத்திற்கு சிறுபொழுது எவை?
Answer: மாலை
22. முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை?
Answer: குறுஞ்சுனை நீர், காட்டாறு
23. முல்லை நிலத்தில் காணப்படும் மரம் எது?
Answer: கொன்றை, காயா, குருந்தம்
24. முல்லை நிலத்தில் காணப்படும் பூ வகை எது?
Answer: முல்லை, பிடவும், தோன்றிப்பூ
25. முல்லை நிலத்தில் உரிப்பொருள் என்ன?
Answer: இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)
2