10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - உரைநடையின்-அணிநலன்கள்

  Play Audio

1. குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் யார்?

Answer: கபிலர்

2. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: நா. பார்த்தசாரதி

3. "உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்று எழுதியவர் யார்?

Answer: தண்டி

4. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

Answer: 1983 செப்டம்பர்

5. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது?

Answer: டி. சி. எம் டேட்டா புரொடக்டஸ்

6. தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கு கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது?

Answer: திருவள்ளுவர் கணினி

7. "திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை போல் வலப்புறமும் தென்புறமும் நீர் நிறைத்த காண்மாய்கள்" என்ற உவமை காணப்படும் நூல்?

Answer: குறிஞ்சி மலர்

8. "களம்புகத் துடித்த நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைத்தான் அதற்கு சான்று" என்று கூறியவர்?

Answer: அறிஞர் அண்ணா

9. "புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" இக்குறளில் பயின்று வரும் அணி?

Answer: எடுத்துக்காட்டு உவமை அணி

10. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன் படுத்துவதை எவ்வாறு அழைப்பர்?

Answer: இணை ஒப்பு

1

11. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்?

Answer: வ. ராமசாமி

12. மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: வ. ராமசாமி

13. இலக்கண என்றால் என்ன?

Answer: அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாக கருதி உயிர், உணர்வு உடையது போல எழுதுவது

14. தமிழ் தென்றல் யார்?

Answer: திரு. வி. கல்யாணசுந்தரனார்

15. "தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும்" என்று எழுதியவர் யார்?

Answer: ரா. பி. சேதுபிள்ளை

16. சொல்லின் செல்வர் யார்?

Answer: ரா. பி. சேதுபிள்ளை

17. தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: ரா. பி. சேதுபிள்ளை

18. சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் யார்?

Answer: மு. வரதராசனார்

19. நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்?

Answer: மு. வரதராசனார்

20. வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்?

Answer: மு. வரதராசனார்

2

21. சோலையில் புகுவேன், மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும் என்ற வரிக்கு சொந்தக்காரர் யார்?

Answer: திரு. வி. கல்யாணசுந்தரனார்

22. முரண்படு மெய்ம்மை என்பதன் ஆங்கில சொல்?

Answer: paradox

23. "இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றுக்கு தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்" இது எதற்க்கான எடுத்துக்காட்டு?

Answer: முரண்படு மெய்ம்மை

24. கலப்பில்லாத பொய் இதை எவ்வாறு கூறுவார்?

Answer: சொல்முரண்

25. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு என்ன பெயர்?

Answer: எதிரிணை இசைவு

26. "குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம்" என்று கூறியவர்?

Answer: ப. ஜீவானந்தம்

27. பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்து கூறியவர் யார்?

Answer: அறிஞர் அண்ணா

28. "இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மை தான் என் நன்மை" என்று கூறியவர் யார்?

Answer: மகாகவி பாரதியார்

29. புதிய உரைநடையின் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: எழில் முதல்வன்

30. எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன?

Answer: மா. இராமலிங்கம்

3

31. எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது கிடைத்தது?

Answer: புதிய உரைநடை என்ற நூலுக்காக

32. மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்?

Answer: எழில் முதல்வன்

33. எழில் முதல்வனின் நூல்கள் யாவை?

Answer: இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்

34. குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணிசெய்தவர்?

Answer: எழில் முதல்வன்

35. "வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய" என்று எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது?

Answer: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை (சிலப்பதிகாரம்)

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்