10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - மொழி - இயல் ஒன்று - அமுதஊற்று - தமிழ்ச்சொல்-வளம்

  Play Audio

1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?

Answer: மகாகவி பாரதியார்

2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: கால்டுவெல்

3. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தாள்

4. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தண்டு

5. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கோல்

6. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தூறு

7. கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தட்டு அல்லது தட்டை

8. கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கழி

9. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கழை

10. புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அடி

1

11. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கவை

12. கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கொம்பு அல்லது கொப்பு

13. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கிளை

14. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சினை

15. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: போத்து

16. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: குச்சு

17. குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது?

Answer: இணுக்கு

18. காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

Answer: காய்ந்த குச்சு (குச்சி)

19. காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

Answer: காய்ந்த சிறுகிளை

20. காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

Answer: காய்ந்த கழி

2

21. காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

Answer: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

22. புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: இலை

23. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தாள்

24. சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தோகை

25. தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: ஓலை

26. காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சண்டு

27. காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சருகு

28. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: துளிர் அல்லது தளிர்

29. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: முறி அல்லது கொழுந்து

30. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: குருத்து

3

31. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கொழுந்தாடை

32. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அரும்பு

33. பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: போது

34. பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: மலர் (அலர்)

35. மரஞ்செடியின் பூ கீழேவிழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: வீ

36. பூ வாடின நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: செம்மல்

37. செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?

Answer: தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்

38. திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

39. திருவள்ளுவர் தவச்சாலையை இரா. இளங்குமரனார் எங்கு நிறுவினார்?

Answer: திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில்

40. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

4

41. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

42. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

43. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

44. இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?

Answer: திரு. வி. க

45. திரு. வி. க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

Answer: இரா. இளங்குமரனார்

46. தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்?

Answer: திரு. வி. க

47. தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?

Answer: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்

48. பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது?

Answer: பூவோடு கூடிய இளம்பிஞ்சு

49. பிஞ்சு என அழைக்கப்படுவது எவை?

Answer: இளம் காய்

50. வடு என அழைக்கப்படுவது எது?

Answer: மாம்பிஞ்சு

5

51. மூசு என அழைக்கப்படுவது?

Answer: பலாப்பிஞ்சு

52. கவ்வை என அழைக்கப்படுவது?

Answer: எள்பிஞ்சு

53. குரும்பை என அழைக்கப்படுவது?

Answer: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

54. முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது?

Answer: சிறு குரும்பை

55. நுழாய் என அழைக்கப்படுவது?

Answer: இளநெல்

56. கச்சல் என அழைக்கப்படுவது?

Answer: வாழைப்பிஞ்சு

57. அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கொத்து

58. வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: தாறு

59. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கதிர்

6

60. நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது?

Answer: அலகு அல்லது குரல்

61. வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சீப்பு

62. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சூம்பல்

63. சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சிவியல்

64. புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சொத்தை

65. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: வெம்பல்

66. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அளியல்

67. குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அழுகல்

68. பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: சொண்டு

69. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: கோட்டான் காய் அல்லது கூகைக்காய்

7

70. தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழ���க்கப்படுகிறது?

Answer: தேரைக்காய்

71. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: அல்லிக்காய்

72. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer: ஒல்லிக்காய்

73. தொலி என்றால் என்ன?

Answer: மிக மெல்லியது

74. தோல் என்றால் என்ன?

Answer: திண்ணமானது

75. ஓடு என்றால் என்ன?

Answer: மிக வன்மையானது

76. தோடு என்றால் என்ன?

Answer: வன்மையானது

77. குடுக்கை என்றால் என்ன?

Answer: சுரையின் ஓடு

78. மட்டை என்றால் என்ன?

Answer: தேங்காய் நெற்றின் மேற்பகுதி

79. உமி என்றால் என்ன?

Answer: நெல், கம்பு முதலியவற்றின் மூடி

8

80. கொம்மை என்றால் என்ன?

Answer: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

81. கூலம் என்றால் என்ன?

Answer: நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்

82. பயறு என்றால் என்ன?

Answer: அவரை, உளுந்து முதலியவை

83. கடலை என்றால் என்ன?

Answer: வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை

84. விதை என்றால் என்ன?

Answer: கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து

85. காழ் என்றால் என்ன?

Answer: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து

86. முத்து என்றால் என்ன?

Answer: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து

87. கொட்டை என்றால் என்ன?

Answer: மா, பனை முதலியவற்றின் வித்து

88. தேங்காய் என்றால் என்ன?

Answer: தென்னையின் வித்து

89. முதிரை என்றால் என்ன?

Answer: அவரை, துவரை முதலிய பயறுகள்

9

90. நாற்று என்றால் என்ன?

Answer: நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை

91. கன்று என்றால் என்ன?

Answer: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

92. குருத்து என்றால் என்ன?

Answer: வாழையின் இளநிலை

93. பிள்ளை என்றால் என்ன?

Answer: தென்னையின் இளநிலை

94. குட்டி என்றால் என்ன?

Answer: விளாவின் இளநிலை

95. மடலி அல்லது வடலி என்றால் என்ன?

Answer: பனையின் இளநிலை

96. பைங்கூல் என்றால் என்ன?

Answer: நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்

97. இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?

Answer: தாள், இலை, தோகை, ஓலை

98. கோதுமையின் வகைகள்?

Answer: சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை

99. தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை?

Answer: செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு

10

100. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

Answer: 60 வகை

101. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

Answer: மலேசியா

102. உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?

Answer: தமிழ் மொழி

103. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்?

Answer: பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்

104. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள் எவை?

Answer: வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி

105. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்?

Answer: தேவநேய பாவாணர்

106. தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer: தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்

107. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

Answer: தேவநேயப் பாவாணர்

108. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?

Answer: தேவநேய பாவாணர்

109. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்?

Answer: தேவநேயப் பாவாணர்

11

110. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?

Answer: தமிழ் மொழி

111. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?

Answer: கார்டிலா

112. போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது?

Answer: லிசுபன்

113. கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?

Answer: 1554

114. ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப் பெயர் என்ன?

Answer: carthila de lingoa tamul e portugues

115. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது?

Answer: கருப்பு, சிவப்பு

116. இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?

Answer: leaf

12

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்