1. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?
Answer: மகாகவி பாரதியார்
2. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: கால்டுவெல்
3. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தாள்
4. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தண்டு
5. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கோல்
6. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தூறு
7. கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தட்டு அல்லது தட்டை
8. கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கழி
9. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கழை
10. புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: அடி
1
11. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கவை
12. கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கொம்பு அல்லது கொப்பு
13. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கிளை
14. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சினை
15. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: போத்து
16. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: குச்சு
17. குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது?
Answer: இணுக்கு
18. காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
Answer: காய்ந்த குச்சு (குச்சி)
19. காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
Answer: காய்ந்த சிறுகிளை
20. காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
Answer: காய்ந்த கழி
2
21. காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?
Answer: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்
22. புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: இலை
23. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தாள்
24. சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தோகை
25. தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: ஓலை
26. காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சண்டு
27. காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சருகு
28. நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: துளிர் அல்லது தளிர்
29. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: முறி அல்லது கொழுந்து
30. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: குருத்து
3
31. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கொழுந்தாடை
32. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: அரும்பு
33. பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: போது
34. பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: மலர் (அலர்)
35. மரஞ்செடியின் பூ கீழேவிழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: வீ
36. பூ வாடின நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: செம்மல்
37. செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?
Answer: தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
38. திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
39. திருவள்ளுவர் தவச்சாலையை இரா. இளங்குமரனார் எங்கு நிறுவினார்?
Answer: திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில்
40. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
4
41. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
42. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
43. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
44. இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?
Answer: திரு. வி. க
45. திரு. வி. க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
Answer: இரா. இளங்குமரனார்
46. தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்?
Answer: திரு. வி. க
47. தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
48. பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது?
Answer: பூவோடு கூடிய இளம்பிஞ்சு
49. பிஞ்சு என அழைக்கப்படுவது எவை?
Answer: இளம் காய்
50. வடு என அழைக்கப்படுவது எது?
Answer: மாம்பிஞ்சு
5
51. மூசு என அழைக்கப்படுவது?
Answer: பலாப்பிஞ்சு
52. கவ்வை என அழைக்கப்படுவது?
Answer: எள்பிஞ்சு
53. குரும்பை என அழைக்கப்படுவது?
Answer: தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
54. முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது?
Answer: சிறு குரும்பை
55. நுழாய் என அழைக்கப்படுவது?
Answer: இளநெல்
56. கச்சல் என அழைக்கப்படுவது?
Answer: வாழைப்பிஞ்சு
57. அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கொத்து
58. வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தாறு
59. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கதிர்
6
60. நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது?
Answer: அலகு அல்லது குரல்
61. வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சீப்பு
62. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சூம்பல்
63. சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சிவியல்
64. புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சொத்தை
65. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: வெம்பல்
66. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: அளியல்
67. குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: அழுகல்
68. பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: சொண்டு
69. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: கோட்டான் காய் அல்லது கூகைக்காய்
7
70. தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: தேரைக்காய்
71. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: அல்லிக்காய்
72. தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: ஒல்லிக்காய்
73. தொலி என்றால் என்ன?
Answer: மிக மெல்லியது
74. தோல் என்றால் என்ன?
Answer: திண்ணமானது
75. ஓடு என்றால் என்ன?
Answer: மிக வன்மையானது
76. தோடு என்றால் என்ன?
Answer: வன்மையானது
77. குடுக்கை என்றால் என்ன?
Answer: சுரையின் ஓடு
78. மட்டை என்றால் என்ன?
Answer: தேங்காய் நெற்றின் மேற்பகுதி
79. உமி என்றால் என்ன?
Answer: நெல், கம்பு முதலியவற்றின் மூடி
8
80. கொம்மை என்றால் என்ன?
Answer: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
81. கூலம் என்றால் என்ன?
Answer: நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்
82. பயறு என்றால் என்ன?
Answer: அவரை, உளுந்து முதலியவை
83. கடலை என்றால் என்ன?
Answer: வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை
84. விதை என்றால் என்ன?
Answer: கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து
85. காழ் என்றால் என்ன?
Answer: புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
86. முத்து என்றால் என்ன?
Answer: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
87. கொட்டை என்றால் என்ன?
Answer: மா, பனை முதலியவற்றின் வித்து
88. தேங்காய் என்றால் என்ன?
Answer: தென்னையின் வித்து
89. முதிரை என்றால் என்ன?
Answer: அவரை, துவரை முதலிய பயறுகள்
9
90. நாற்று என்றால் என்ன?
Answer: நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை
91. கன்று என்றால் என்ன?
Answer: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
92. குருத்து என்றால் என்ன?
Answer: வாழையின் இளநிலை
93. பிள்ளை என்றால் என்ன?
Answer: தென்னையின் இளநிலை
94. குட்டி என்றால் என்ன?
Answer: விளாவின் இளநிலை
95. மடலி அல்லது வடலி என்றால் என்ன?
Answer: பனையின் இளநிலை
96. பைங்கூல் என்றால் என்ன?
Answer: நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்
97. இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
Answer: தாள், இலை, தோகை, ஓலை
98. கோதுமையின் வகைகள்?
Answer: சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை
99. தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை?
Answer: செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு
10
100. சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
Answer: 60 வகை
101. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
Answer: மலேசியா
102. உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?
Answer: தமிழ் மொழி
103. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்?
Answer: பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்
104. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள் எவை?
Answer: வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி
105. மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்?
Answer: தேவநேய பாவாணர்
106. தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer: தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்
107. உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
Answer: தேவநேயப் பாவாணர்
108. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?
Answer: தேவநேய பாவாணர்
109. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்?
Answer: தேவநேயப் பாவாணர்
11
110. இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
Answer: தமிழ் மொழி
111. முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?
Answer: கார்டிலா
112. போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது?
Answer: லிசுபன்
113. கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?
Answer: 1554
114. ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப் பெயர் என்ன?
Answer: carthila de lingoa tamul e portugues
115. கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது?
Answer: கருப்பு, சிவப்பு
116. இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?
Answer: leaf
12