1. காசிக்காண்டம் என்ற நூலை இயற்றியவர் யார்?
Answer: அதிவீரராம பாண்டியர்
2. விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை?
Answer: ஒன்பது
3. ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்?
Answer: அதிவீரராம பாண்டியர்
4. அருகுற என்பதன் பொருள் என்ன?
Answer: அருகில்
5. முகமன் என்பதன் பொருள் என்ன?
Answer: ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
6. நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: பண்புத்தொகை
7. வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: தொழிற்பெயர்
8. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
Answer: விவேகசிந்தாமணி
9. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?
Answer: காசிக்காண்டம்
10. காசிக்காண்டம் எதை விளக்குவதாக அமைந்துள்ளது?
Answer: துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
11. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?
Answer: அதிவீரராம பாண்டியன்
1
12. அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது?
Answer: வெற்றி வேற்கை
13. வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது?
Answer: நறுந்தொகை
14. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer: அதிவீரராம பாண்டியன்
15. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் போன்ற நூல்கள் எழுதியவர்?
Answer: அதிவீரராம பாண்டியன்
2