10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - விருந்து-போற்றுதும்

  Play Audio

1. விருந்தே புதுமை என்று கூறியவர்?

Answer: தொல்காப்பியம்

2. விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் யார்?

Answer: திருவள்ளுவர் (இல்லறவியல்)

3. முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை "மோப்பக் குழையும் அனிச்சம் "என்று எடுத்துரைத்தவர் யார்?

Answer: திருவள்ளுவர்

4. "தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை "என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

5. விருந்தோம்பல் பற்றி 17 - ம் நுற்றாண்டின் சுவர் எங்கு உள்ளது?

Answer: சிதம்பரம்

6. கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரை போற்றிப் பேணல் பழந்தமிழரின் மரபு என்பதை உணர்த்தியவர்?

Answer: இளங்கோவடிகள்

7. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக கூறியவர் யார்?

Answer: கம்பர்

8. கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகியவர் யார்?

Answer: ஜெயங்கொண்டார்

9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ----- பண்பின் அடிப்படை ஆடும்?

Answer: விருந்தோம்பல்

1

10. உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - என்ற புறநானுறு பாடலை பாடியவர் யார்?

Answer: கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி

11. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது?

Answer: நற்றிணை

12. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் "என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: நற்றிணை

13. "காலின் ஏழடி பின் சென்று" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: பொருநராற்றுப்படை

14. விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி எந்த நூலில் உள்ளது?

Answer: புறநானுறு

15. குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

Answer: புறநானுறு

16. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

17. "நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் " - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

Answer: புறநானுறு

18. விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்?

Answer: இளையான்குடி மரறநாயனார்

19. நெய்தல் நிலத்தல் பாணர்களை வரவேற்று "குழல் மீன் கறி" பிறவும் கொடுத்ததாக கூறும் நூல்?

Answer: சிறுபாணாற்றுப்படை

2

20. இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு" என்ற கவிதையை இயற்றியவர் யார்?

Answer: அம்சப்பிரியா

21. உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் எது?

Answer: குறுந்தொகை

22. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

Answer: குறுந்தொகை

23. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண் " - என்ற வரியைக் கூறியவர் யார்?

Answer: ஒளவையார்

24. "வரகரிசிக் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே" என்று பாடியவர் யார்?

Answer: ஒளவையார்

25. யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாகத் தோன்றின?

Answer: நாயக்கர், மராட்டியர் காலத்தில்

26. தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்து இடம் உண்டு?

Answer: வாழை இலை

27. எந்த தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து விழாவைக் கொண்டாடி வருகிறது?

Answer: அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்

28. இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித் திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இறையுண்ணும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: பாரதிதாசன்

29. "விருந்தினரைப் வழி அனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் "என்று கூறும் நூல் எது?

Answer: பொருநராற்றுப்படை

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்