10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - திருக்குறள்

  Play Audio

1. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உவமை அணி

2. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: எடுத்துக்காட்டு உவமையணி

3. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Answer: உவமையணி

4. திருக்குறள் பற்றிய அறிவுமதியின் கவிதை என்ன?

Answer: உரை (றை) ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்

1

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்