1. ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது?
Answer: தொகாநிலைத் தொடர்
2. தொகாநிலைத் தொடர்க்கு எ கா?
Answer: காற்று வீசியது, குயில் கூவியது
3. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
Answer: 9வகைப்படும்
4. 9வகையான தொகாநிலை தொடர்கள் யாவை?
Answer: எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்
5. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது?
Answer: எழுவாய் தொடர் எனப்படும்
6. எழுவாய் தொடர் எ கா?
Answer: இனியன் கவிஞர் - பெயர் காவிரி பாய்ந்தது - வினை பேருந்து வருமா - வினா
7. விளியுடன் வினை தொடர்வது?
Answer: விளித்தொடர் எனப்படும்
8. விளித்தொடர்க்கு எ கா?
Answer: நண்பா எழுது
9. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?
Answer: வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்
1
10. வினைமுற்றத் தொடர்க்கு எ கா?
Answer: பாடினாள் கண்ணகி
11. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?
Answer: முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்
12. பெயரெச்சத் தொடர்க்கு எ கா?
Answer: கேட்ட பாடல்
13. வினையெச்சத் தொடர் என்றால் என்ன?
Answer: முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது
14. வினையெச்சத் தொடர்க்கு எ கா?
Answer: பாடி மகிழ்ந்தனர்
15. வேற்றுமை தொடர் என்றால் என்ன?
Answer: வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்
16. வேற்றுமை உருபுகள் எவை?
Answer: ஐ, ஆல், கு, ன், அது, கண், விளி
17. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
Answer: இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்
18. இடைச்சொல் தொடர்க்கு எ கா?
Answer: மற்றொன்று - மற்று + ஒன்று
19. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
Answer: உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்
2
20. அடுக்குத் தொடர் என்றால் என்ன?
Answer: ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்
21. அடுக்குத் தொடர்க்கு எ கா?
Answer: வருக வருக வருக
22. பின்வருவனவற்றுள் முறையான தொடர்?
Answer: தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
23. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது?
Answer: சிற்றுர்
24. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?
Answer: வேற்றுமை உருபு
25. காசிக்காண்டம் என்பது?
Answer: காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்
26. விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?
Answer: இன்மையிலும் விருந்து
27. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
Answer: முக்கூடற்பள்ளு
28. கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்?
Answer: காளமேகப்புலவர்
3