10 ஆம் வகுப்பு - முதல் பருவம் - பண்பாடு - இயல் மூன்று - கூட்டாஞ்சோறு - தொகாநிலைத்-தொடர்கள்

  Play Audio

1. ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது?

Answer: தொகாநிலைத் தொடர்

2. தொகாநிலைத் தொடர்க்கு எ கா?

Answer: காற்று வீசியது, குயில் கூவியது

3. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

Answer: 9வகைப்படும்

4. 9வகையான தொகாநிலை தொடர்கள் யாவை?

Answer: எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்

5. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது?

Answer: எழுவாய் தொடர் எனப்படும்

6. எழுவாய் தொடர் எ கா?

Answer: இனியன் கவிஞர் - பெயர் காவிரி பாய்ந்தது - வினை பேருந்து வருமா - வினா

7. விளியுடன் வினை தொடர்வது?

Answer: விளித்தொடர் எனப்படும்

8. விளித்தொடர்க்கு எ கா?

Answer: நண்பா எழுது

9. வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?

Answer: வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்

1

10. வினைமுற்றத் தொடர்க்கு எ கா?

Answer: பாடினாள் கண்ணகி

11. பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?

Answer: முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்

12. பெயரெச்சத் தொடர்க்கு எ கா?

Answer: கேட்ட பாடல்

13. வினையெச்சத் தொடர் என்றால் என்ன?

Answer: முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது

14. வினையெச்சத் தொடர்க்கு எ கா?

Answer: பாடி மகிழ்ந்தனர்

15. வேற்றுமை தொடர் என்றால் என்ன?

Answer: வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்

16. வேற்றுமை உருபுகள் எவை?

Answer: ஐ, ஆல், கு, ன், அது, கண், விளி

17. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?

Answer: இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்

18. இடைச்சொல் தொடர்க்கு எ கா?

Answer: மற்றொன்று - மற்று + ஒன்று

19. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?

Answer: உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்

2

20. அடுக்குத் தொடர் என்றால் என்ன?

Answer: ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்

21. அடுக்குத் தொடர்க்கு எ கா?

Answer: வருக வருக வருக

22. பின்வருவனவற்றுள் முறையான தொடர்?

Answer: தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

23. "சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது?

Answer: சிற்றுர்

24. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

Answer: வேற்றுமை உருபு

25. காசிக்காண்டம் என்பது?

Answer: காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்

26. விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?

Answer: இன்மையிலும் விருந்து

27. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

Answer: முக்கூடற்பள்ளு

28. கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்?

Answer: காளமேகப்புலவர்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்