10 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறம்-தத்துவம்-சிந்தனை - இயல் எட்டு - பெருவழி - பா-வகை-அலகிடுதல்

  Play Audio

1. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது?

Answer: ஆறு உறுப்புகள்

2. யாப்பின் ஆறு உறுப்புகள் யாவை?

Answer: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

3. பா எத்தனை வகைப்படும்?

Answer: 4 வகை

4. நான்கு வகையான பாக்கள் யாவை?

Answer: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

5. ஓசை எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)

6. வெண்பாவிற்கு உரிய ஓசை என்ன?

Answer: செப்பல் ஓசை

7. திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை?

Answer: வெண்பா

8. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன?

Answer: அகவல் ஓசை

9. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது?

Answer: அகவற்பா என்னும் ஆசிரியப்பா

10. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை?

Answer: அகவற்பா (ஆசிரியப்பா)

1

11. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவம் ஓசை?

Answer: துள்ளல் ஓசை

12. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?

Answer: துள்ளல் இசை

13. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?

Answer: தூங்கல் இசை

14. வெண்பா எத்தனை வகைப்படும்?

Answer: 5 வகைப்படும் அவை (குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பா)

15. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?

Answer: நான்கு வகைப்படும் அவை (நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பா)

16. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை எது?

Answer: வெண்பா

17. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை எது?

Answer: ஆசிரியப்பா (அகவற்பா)

18. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும் பா எவ்வகை?

Answer: வெண்பா

19. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பா எவ்வகை?

Answer: ஆசிரியப்பா (அகவற்பா)

20. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் பா எவ்வகை?

Answer: வெண்பா

2

21. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு எவ்வகை பா?

Answer: ஆசிரியப்பா (அகவற்பா)

22. யாப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

Answer: புலவர் குழந்தை

23. ஓரசைச் சீர்: நேர்

Answer: நாள்

24. நிரை

Answer: மலர்

25. நேர்பு

Answer: காசு

26. நிரைபு

Answer: பிறப்பு

27. ஈரசைச் சீர்: நேர் நேர்

Answer: தேமா

28. நிரை நேர்

Answer: புளிமா

29. நிரை நிரை

Answer: கருவிளம்

30. நேர் நிரை

Answer: கூவிளம்

31. மூவசைச் சீர்: நேர் நேர் நேர்

Answer: தேமாங்காய்

32. நிரை நேர் நேர்

Answer: புளிமாங்காய்

33. நிரை நிரை நேர்

Answer: கருவிளங்காய்

34. நேர் நிரை நேர்

Answer: கூவிளங்காய்

35. நேர் நேர் நிரை

Answer: தேமாங்கனி

36. நிரை நேர் நிரை

Answer: புளிமாங்கனி

37. நிரை நேர் நிரை

Answer: கருவிளங்கனி

38. மேன்மை தரும் அறம் என்பது?

Answer: கைமாறு கருதாமல் அறம் செய்வது

39. "வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல்" இவ்வடி குறிப்பிடுவது?

Answer: இடையறாது அறப்பணி செய்தலை

40. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்?

Answer: அதியன்; பெருஞ்சாத்தன்

41. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்?

Answer: இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

42. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்?

Answer: அகவற்பா

43. 'மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

Answer: நாணற்காடன்

3

44. 'விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

Answer: புதுவைத் தமிழ் நெஞ்சன்

45. 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த' என்ற வரியை பாடியவர் யார்?

Answer: வள்ளலார்

46. கான் அடை என்பதன் பொருள் என்ன?

Answer: காட்டைச் சேர்

47. கான் நடை என்பதன் பொருள் என்ன?

Answer: காட்டுக்கு நடத்தல்

48. கால் நடை என்பதன் பொருள் என்ன?

Answer: காலால் நடத்தல்

49. belief ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: நம்பிக்கை

50. renaissance ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: மறுமலர்ச்சி

51. philosopher ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: மெய்யியலாளர்

52. revivalism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

Answer: மீட்டுருவாக்கம்

53. அறமும் அரசியலும் நூலின் ஆசிரியர் யார்?

Answer: மு. வரதராசனார்

54. அபிக்கவிதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer: அபி

4

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்