1. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
Answer: ஆறு உறுப்புகள்
2. யாப்பின் ஆறு உறுப்புகள் யாவை?
Answer: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
3. பா எத்தனை வகைப்படும்?
Answer: 4 வகை
4. நான்கு வகையான பாக்கள் யாவை?
Answer: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
5. ஓசை எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)
6. வெண்பாவிற்கு உரிய ஓசை என்ன?
Answer: செப்பல் ஓசை
7. திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை?
Answer: வெண்பா
8. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன?
Answer: அகவல் ஓசை
9. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது?
Answer: அகவற்பா என்னும் ஆசிரியப்பா
10. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை?
Answer: அகவற்பா (ஆசிரியப்பா)
1
11. செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவம் ஓசை?
Answer: துள்ளல் ஓசை
12. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Answer: துள்ளல் இசை
13. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Answer: தூங்கல் இசை
14. வெண்பா எத்தனை வகைப்படும்?
Answer: 5 வகைப்படும் அவை (குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பா)
15. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு வகைப்படும் அவை (நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பா)
16. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை எது?
Answer: வெண்பா
17. ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை எது?
Answer: ஆசிரியப்பா (அகவற்பா)
18. இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும் பா எவ்வகை?
Answer: வெண்பா
19. மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பா எவ்வகை?
Answer: ஆசிரியப்பா (அகவற்பா)
20. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் பா எவ்வகை?
Answer: வெண்பா
2
21. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு எவ்வகை பா?
Answer: ஆசிரியப்பா (அகவற்பா)
22. யாப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
Answer: புலவர் குழந்தை
23. ஓரசைச் சீர்: நேர்
Answer: நாள்
24. நிரை
Answer: மலர்
25. நேர்பு
Answer: காசு
26. நிரைபு
Answer: பிறப்பு
27. ஈரசைச் சீர்: நேர் நேர்
Answer: தேமா
28. நிரை நேர்
Answer: புளிமா
29. நிரை நிரை
Answer: கருவிளம்
30. நேர் நிரை
Answer: கூவிளம்
31. மூவசைச் சீர்: நேர் நேர் நேர்
Answer: தேமாங்காய்
32. நிரை நேர் நேர்
Answer: புளிமாங்காய்
33. நிரை நிரை நேர்
Answer: கருவிளங்காய்
34. நேர் நிரை நேர்
Answer: கூவிளங்காய்
35. நேர் நேர் நிரை
Answer: தேமாங்கனி
36. நிரை நேர் நிரை
Answer: புளிமாங்கனி
37. நிரை நேர் நிரை
Answer: கருவிளங்கனி
38. மேன்மை தரும் அறம் என்பது?
Answer: கைமாறு கருதாமல் அறம் செய்வது
39. "வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல்" இவ்வடி குறிப்பிடுவது?
Answer: இடையறாது அறப்பணி செய்தலை
40. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்?
Answer: அதியன்; பெருஞ்சாத்தன்
41. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்?
Answer: இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
42. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்?
Answer: அகவற்பா
43. 'மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
Answer: நாணற்காடன்
3
44. 'விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
Answer: புதுவைத் தமிழ் நெஞ்சன்
45. 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த' என்ற வரியை பாடியவர் யார்?
Answer: வள்ளலார்
46. கான் அடை என்பதன் பொருள் என்ன?
Answer: காட்டைச் சேர்
47. கான் நடை என்பதன் பொருள் என்ன?
Answer: காட்டுக்கு நடத்தல்
48. கால் நடை என்பதன் பொருள் என்ன?
Answer: காலால் நடத்தல்
49. belief ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: நம்பிக்கை
50. renaissance ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: மறுமலர்ச்சி
51. philosopher ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: மெய்யியலாளர்
52. revivalism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?
Answer: மீட்டுருவாக்கம்
53. அறமும் அரசியலும் நூலின் ஆசிரியர் யார்?
Answer: மு. வரதராசனார்
54. அபிக்கவிதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: அபி
4