1. பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்யாக வரும் இரு எழுத்துகள்?
Answer: ய், வ்
2. "உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?
Answer: நன்னூல்
3. குற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: மாசற்றார்
4. முற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: வரவறிந்தான்
5. இயல்பீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: பள்ளித்தோழன்
6. விதியீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: நிலத்தலைவர்
7. பூப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: பூங்கொடி
8. மெய்யீற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: வாயொலி
9. தனிக்குறில்முன் ஒற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: கல்லதர்
10. மகர ஈற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?
Answer: பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்
1
11. மகர ஈற்று புணர்ச்சி ----- நிலைகளில் வரும்?
Answer: 3
12. பண்புப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
Answer: பைந்தமிழ், நெட்டிலை, மூதூர்
2