1. கல்வி கற்பதற்கான பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' என்று குறிப்பிடும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
2. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?
Answer: 8
3. கல்வியின் பொருட்டு ஒருவருக்கு "பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் எது?
Answer: தொல்காப்பியம்
4. ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த நூல் எது?
Answer: தொல்காப்பியம், நன்னூல்
5. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! " என்ற புறநானூற்று பாடலை பாடியவர் யார்?
Answer: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
6. பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது?
Answer: புறநானூறு
7. 'சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது'என்றவர் யார்?
Answer: மா. இராசமாணிக்கனார்
8. தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது என்று கூறியவர்?
Answer: மா. இராசமாணிக்கனார்
9. "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: திருமந்திரம்
10. "கல்வி அழகே அழகு" என்று கூறும் நூல் எது?
Answer: நாலடியார்
1
11. இளமையில் கல் என்று கூறியவர் யார்?
Answer: ஒளவையார்
12. தமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகள் எவை?
Answer: மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி
13. எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
Answer: கணக்காயர்
14. பிற்காலத்தில் ஐந்தாக விரிவாக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கங்களையும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
Answer: ஆசிரியர்
15. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?
Answer: குரவர்
16. கற்ற வித்தைகளை அரங்கேற்றம் இடமாகத் திகழ்வது?
Answer: மன்றம்
17. செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவையாக விளங்கியது?
Answer: சான்றோர் அவை
18. கல்வி கற்பிக்கப்படும் இடங்களை "பள்ளி" என்றுக் கூறும் நூல் எது?
Answer: பெரிய திருமொழி
19. கல்வி கற்பிக்கப்படும் இங்களை "ஓதும் பள்ளி" என்று கூறும் நூல் எது?
Answer: திவாகர நிகண்டு
20. கல்வி கற்பிக்கும் இடங்களை 'கல்லூரி' என்றுக் கூறும் நூல் எது?
Answer: சீவகசிந்தாமணி
2
21. கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளை எவ்வாறு அழைத்தனர்?
Answer: ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்
22. கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடிகளும் ----- சமயத்தின் தலையாய அரங்கங்களாகும்?
Answer: சமண சமயம்
23. சமண சமயத்தை சேர்ந்த ----- துறவிகள் மலைக்குகைகளில் தங்கினர்?
Answer: திகம்பரத்
24. பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள்?
Answer: படுக்கை
25. பள்ளி என்ற சொல் ----- சமயத்தின் கொடையாகும்?
Answer: சமண, பௌத்த
26. சமணப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் காணப்படும் இடம்?
Answer: திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை
27. பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் ----- என்ற இடத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவினார்?
Answer: விளாப்பாக்கம்
28. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்?
Answer: மணிமேகலை
29. "ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் எது?
Answer: மணிமேகலை
30. காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சீன பயணி யார்?
Answer: யுவான் சுவாங்
3
31. தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவனெண்ட் பெல் என்பவர் "மெட்ராஸ் காலேஜ்" என்ற பள்ளியை நிறுவிய இடம்?
Answer: ஸ்காட்லாந்த்து
32. மெட்ராஸ் காலேஜ் ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டெம், மானிடரி சிஸ்டம்
33. ----- முறை போதனா முறையை தாண்டி வாழ்வியலை கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது?
Answer: குருகுலக்கல்வி
34. தெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை?
Answer: திண்ணைப்பள்ளிகள்
35. திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ----- என்றே அழைக்கப்பட்டனர்?
Answer: கணக்காயர்கள்
36. திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி என அழைத்தவர்கள் யார்?
Answer: ஆங்கிலேயர்கள்
37. சென்னை மாகாணத்தில் ----- இயங்கி வந்தன என்று தாமஸ் மன்றோ ஆய்வில் குறிப்பிடுகிறார்?
Answer: 12, 498
38. சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த திண்ணைப்பள்ளிகள் பற்றி யார் காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது?
Answer: தாமஸ் மன்றோ
39. திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரிடம் உ. வே. சாமிநாதார் எம்முறையில் கல்வி கற்றார்?
Answer: திண்ணைப்பள்ளி
40. "கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: திரிகடுகம்
4
41. டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு?
Answer: 1706
42. இந்தியாவில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை எங்கு ஏற்படுத்தினர்?
Answer: தரங்கம்பாடி
43. தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?
Answer: டச்சுக்காரர்கள்
44. இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது?
Answer: தமிழ்
45. 1453 இல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்த ஜெர்மனி நாட்டவர் யார்?
Answer: ஜான் கூட்டன்பர்க்
46. தமிழகத்தில் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும் அமைத்தவர்கள்?
Answer: டச்சுக்காரர்கள்
47. எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது?
Answer: 1813 சாசன சட்டம்
48. இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கொண்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?
Answer: கீழைத்தேயவாதிகள்
49. மேற்கத்திய பாணியில் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என வாதிட்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?
Answer: மேற்கத்தியவாதிகள்
50. கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
Answer: 1835
5
51. சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
Answer: 1854
52. இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படும் அறிக்கை?
Answer: சார்லஸ் வுட்டின் அறிக்கை
53. கி. பி. 1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?
Answer: ஹண்டர் கல்விக்குழு
54. புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்க பரிந்துரைத்த கல்விக்குழு எது?
Answer: ஹண்டர் கல்விக்குழு
55. ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்த 19ம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்காத தெரிந்தவர்களின் எண்ணிக்கை ----- ஆகா இருந்தது?
Answer: 15
56. 14 வயது வரை அனைவருக்��ும் கட்டாய இலவச கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு எது?
Answer: பிரிவு - 45
6