1. தமிழ்மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று ----- என்பதாகும்?
Answer: பதம்
2. பதம் எத்தனை வகைப்படும்?
Answer: 2
3. பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப்பொருள் தரும் நிலையில் இருந்தால் ----- என்பர்?
Answer: பகுபதம்
4. இடைச்சொல் மற்றும் உரிச்சொல் ----- பதத்திற்கு உரியவை?
Answer: பகாப்பதம்
5. சொற்களை ----- நோக்கிலும் பிரித்து எழுதுவர்?
Answer: பொருள்
6. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
Answer: ஆறு
7. ஒரு வினைப்பகுபதத்தில் ----- , ----- அடிப்படை உறுப்புகளாக உள்ளன?
Answer: பகுதியும், விகுதியும்
8. ஒரு பகுபதத்தில் பொருள் தரும் உறுப்புகள்?
Answer: பகுதி, விகுதி, இடைநிலை
1
9. பகுதியை ----- என்றும் கூறுவர்?
Answer: முதனிலை
10. ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு ----- எனப்படும்?
Answer: விகுதி
11. வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண பொருண்மைகளை ----- பயன்படுகிறது?
Answer: விகுதி
12. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு?
Answer: இடைநிலை
13. வினைப்பகுப்பதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்?
Answer: 2
14. பெயர் பகுப்பதத்தில் வரும் இடைநிலையை ----- என்பர்?
Answer: பெயர் இடைநிலை
15. ஒரு வினைப்பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு ----- அல்லது ----- எனப்படும்?
Answer: கால இடைநிலை, காலம் காட்டும் இடைநிலை
16. எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை ----- ஆகும்?
Answer: எதிர்மறை இடைநிலை
17. ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடுஇணைப்பதற்கு வரும் இடைநிலை ----- ஆகும்?
Answer: பெயர் இடைநிலை
2
18. பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு ----- ஆகும்?
Answer: சந்தி
19. ----- பகுதிக்கும் இடைநிலைக்கும் வருவது பெருவழக்கம்?
Answer: சந்தி
20. பெரும்பாலும் ----- என்னும் மூன்று எழுத்துக்களுள் ஒன்று சந்தியாக வரும்?
Answer: த், ப், க்
21. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு ----- எனப்படும்?
Answer: எழுத்துப்பேறு
22. சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை ----- என குறிப்பிடல் வேண்டும்?
Answer: எழுத்துப்பேறு
23. சந்தி என்பதற்கு ----- என்று பெயர்?
Answer: புணர்ச்சி
24. விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்தே ----- ஆகும்?
Answer: எழுத்துப்பேறு
25. பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு ----- ஆகும்?
Answer: சாரியை
3
26. பெரும்பாலும் ----- இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்?
Answer: சாரியை
27. சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனை ----- என்று குறிப்பிடல் வேண்டும்?
Answer: சாரியை
28. பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்?
Answer: விகாரம்
29. இஃது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக திரிந்து கெட்டும் நெடில் குறியாகவும் மாற்றம் பெரும். இத்தகைய மாற்றமே ----- எனப்படும்?
Answer: விகாரம்
4