1. "காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தனவொடு பிடவலர்ந்து கவினிப் "என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
Answer: பேயனார்
2. கவினி என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: அழகுற
3. ஆல் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
Answer: அசைநிலை
4. ஐங்குறுநூறு பிரித்து எழுதுக?
Answer: ஐந்து + குறுமை + நூல்
5. ஐங்குறுநூறு நூலின் பாடல் எல்லை எது?
Answer: முன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்
6. திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 500பாடல்கள் கொண்ட நூல் எது?
Answer: ஐங்குறுநூறு
7. முல்லை திணை பாடிய புலவர் யார்?
Answer: பேயனார்
8. மருதத்திணை பாடிய புலவர் யார்?
Answer: ஓரம்போகியார்
9. நெய்தல் திணை பாடிய புலவர் யார்?
Answer: அம்மூவனார்
10. பாலைத் திணை பாடிய புலவர் யார்?
Answer: ஓதலாந்தையர்
1
11. ஐந்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
Answer: பாரதம் பாடிய பெருந்தேவனார்
12. ஐந்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
Answer: புலன்துறை முற்றிய கூடலுக்கிழார்
13. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யார்?
Answer: யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை
14. சங்ககால புலவராகிய பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன எண்ணிக்கை எத்தனை?
Answer: 105
2