1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?
Answer: திருச்சாழல்
2. 'கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணோடீ'என்ற பாடலை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
3. சொல்லும் பொருளும்: காயில் -
Answer: வெகுண்டால்
4. அந்தம் -
Answer: முடிவு
5. அயன் -
Answer: பிரமன்
6. மால் -
Answer: விஷ்ணு
7. ஆலாலம் -
Answer: நஞ்சு
8. இலக்கணக்குறிப்பு: சுடுகாடு, கொல்புலி, குரைகடல் -
Answer: வினைத்தொகை
9. நல்லாடை -
Answer: பண்புத்தொகை
10. பிரித்து எழுதுக'கற்பொடி '?
Answer: கல் + பொடி
1
11. பிரித்து எழுதுக 'உலகனைத்தும்'?
Answer: உலகு + அனைத்தும்
12. பிரித்து எழுதுக 'திருவடி'?
Answer: திரு + அடி
13. திருவாசகம் என்பது ----- மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்?
Answer: சிவபெருமான்
14. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
15. சைவ சமயத்தின் 12 திருமுறைகளில் திருவாசகம் எத்தனையாவது திருமுறை?
Answer: 8
16. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
Answer: 658
17. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டு உள்ளன?
Answer: 38 சிவத்தலங்கள்
18. திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை?
Answer: 51
19. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை ----- பாடல்கள்?
Answer: திருவாசகப் பாடல்கள்
20. 'திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது?
Answer: முதுமொழி
2
21. திருச்சாழல் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: ஜி. யு. போப்
22. திருச்சாழல் சிவபெருமானின் எக்கோவிலில் பாடப்பட்டது?
Answer: தில்லை கோவில்
23. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
Answer: திருவாதவூர்
24. மாணிக்கவாசகர் சைவ சமய குறவர் ----- ஒருவர்?
Answer: நால்வரில்
25. அரிமர்த்ததான பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
26. திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
Answer: மாணிக்கவாசகர்
3