1. தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல்?
Answer: தொல்காப்பியம்
2. எழுத்து, சொல் மட்டுமின்றி வாழ்வதற்கு தேவையான பொருள் இலக்கணத்தை கூறும் நூல்?
Answer: தொல்காப்பியம்
3. "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
Answer: தொல்காப்பியம்
4. இசுக்கும் என்ற சொல்லின் பொருள்?
Answer: நீக்கும்
5. இழுக்கு என்ற சொல்லின் பொருள்?
Answer: குற்றம்
6. வினாயவை என்ற சொல்லின் பொருள்?
Answer: கேட்டவை
7. இலக்கணக்குறிப்பு: - அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் -
Answer: தொழிற்பெயர்
8. நனிஇசுக்கும் -
Answer: உரிச்சொற்றொடர்
9. பிரித்து எழுதுக இழுக்கின்றி?
Answer: இழுக்கு + இன்றி
10. பிரித்து எழுதுக முறையறிந்து?
Answer: முறை + அறிந்து
1
11. நமக்கு கிடைத்த தமிழ் நூலகளில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?
Answer: தொல்காப்பியம்
12. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?
Answer: தொல்காப்பியர்
13. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Answer: 3
14. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை இயல்கள் உள்ளன?
Answer: 9
15. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை?
Answer: 27
2