11 ஆம் வகுப்பு - செய்யுள் - கல்வி - இயல் ஐந்து - கேடில்-விழுச்செல்வம் - தொல்காப்பியம்-சிறப்பு-பாயிர-உரைவிளக்கப்-பாடல்

  Play Audio

1. தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல்?

Answer: தொல்காப்பியம்

2. எழுத்து, சொல் மட்டுமின்றி வாழ்வதற்கு தேவையான பொருள் இலக்கணத்தை கூறும் நூல்?

Answer: தொல்காப்பியம்

3. "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

Answer: தொல்காப்பியம்

4. இசுக்கும் என்ற சொல்லின் பொருள்?

Answer: நீக்கும்

5. இழுக்கு என்ற சொல்லின் பொருள்?

Answer: குற்றம்

6. வினாயவை என்ற சொல்லின் பொருள்?

Answer: கேட்டவை

7. இலக்கணக்குறிப்பு: - அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் -

Answer: தொழிற்பெயர்

8. நனிஇசுக்கும் -

Answer: உரிச்சொற்றொடர்

9. பிரித்து எழுதுக இழுக்கின்றி?

Answer: இழுக்கு + இன்றி

10. பிரித்து எழுதுக முறையறிந்து?

Answer: முறை + அறிந்து

1

11. நமக்கு கிடைத்த தமிழ் நூலகளில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?

Answer: தொல்காப்பியம்

12. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

13. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

Answer: 3

14. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை இயல்கள் உள்ளன?

Answer: 9

15. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை?

Answer: 27

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்