1. எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர்?
Answer: பாரதியார்
2. பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது?
Answer: மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி
3. பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
Answer: சுதேசமித்திரன்
4. பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை?
Answer: சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி
5. பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள் எவை?
Answer: சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்
6. மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்?
Answer: பாரதியார்
7. பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்?
Answer: இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி. சு. பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்
8. தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்?
Answer: பாரதியார்
9. பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டார்?
Answer: விஜயா, இந்தியா
10. பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள் யார்?
Answer: பி. பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி. சு. நெல்லையப்பர், கனகலிங்கம்
1
11. பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்?
Answer: சித்திராவளி
12. தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்?
Answer: பாரதியார்
13. பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில் குரல் வெண்பா எழுதியுள்ளார்?
Answer: சக்கரவர்த்தினி
14. எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்?
Answer: இந்தியா
15. சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்?
Answer: புரட்சி, விடுதலை
16. "கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்று கூறியவர்?
Answer: பாரதியார்
17. இறந்து போவதற்கு முன் "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்" என்று கூறியவர்?
Answer: பாரதியார்
18. பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை எப்புனைப்பெயரில் அழைப்பார்?
Answer: வள்ளி, கண்ணம்மா
19. தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
Answer: பாரதியார்
20. தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer: மகுடமிடல்
2