6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தொழில்-வணிகம் - இயல் ஆறு - கூடித்-தொழில்-செய் - நானிலம்-படைத்தவன்

  Play Audio

1. "கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: முடியரசன்

2. மல்லெடுத்த என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வலிமைபெற்ற

3. மறம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வீரம்

4. சமர் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: போர்

5. எக்களிப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பெருமகிழ்ச்சி

6. நல்கும் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: தரும்

7. கலம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: கப்பல்

8. கழனி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: வயல்

9. ஆழி என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: கடல்

10. முடியரசனின் இயற்பெயர் என்ன?

Answer: துரைராசு

1

11. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியவர் யார்?

Answer: முடியரசன்

12. "திராவிட நாட்டின் வானம்பாடி" என்று பாராட்டப்பெற்றவர் யார்?

Answer: முடியரசன்

13. "வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: பாரதியார்

14. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ----- ?

Answer: வீரம்

15. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: கல் + எடுத்து

16. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

Answer: நான்கு + நிலம்

17. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: நாடென்ற

18. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதுக?

Answer: கலமேறி

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்