1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: ஆசாரக்கோவை
2. நன்றியறிதல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: பிறர் செய்த உதவியை மறவாமை
3. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: எல்லோரையும் சமமாகப் பேணுதல்
4. நட்டல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: நட்புக் கொள்ளுதல்
5. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
Answer: பெருவாயின் முள்ளியார்
6. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
Answer: கயத்தூர்
7. ஆசாரக்கோவை என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?
Answer: ஆசாரக்கோவை
9. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
Answer: நூறு
10. பிறரிடம் நான் ----- பேசுவேன்?
Answer: இன்சொல்
1
11. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ----- ஆகும்?
Answer: பொறை
12. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
Answer: அறிவுடைமை
13. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் எது?
Answer: இவையெட்டும்
14. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
Answer: நன்றி + அறிதல்
15. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
Answer: பொறை + உடைமை
16. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?
Answer: துன்பம்
17. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?
Answer: நற்பண்புகள் உடையவரோடு
2