6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - ஆசாரக்கோவை

  Play Audio

1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer: ஆசாரக்கோவை

2. நன்றியறிதல் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பிறர் செய்த உதவியை மறவாமை

3. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: எல்லோரையும் சமமாகப் பேணுதல்

4. நட்டல் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: நட்புக் கொள்ளுதல்

5. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?

Answer: பெருவாயின் முள்ளியார்

6. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

Answer: கயத்தூர்

7. ஆசாரக்கோவை என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு

8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?

Answer: ஆசாரக்கோவை

9. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?

Answer: நூறு

10. பிறரிடம் நான் ----- பேசுவேன்?

Answer: இன்சொல்

1

11. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ----- ஆகும்?

Answer: பொறை

12. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

Answer: அறிவுடைமை

13. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் எது?

Answer: இவையெட்டும்

14. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

Answer: நன்றி + அறிதல்

15. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

Answer: பொறை + உடைமை

16. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?

Answer: துன்பம்

17. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

Answer: நற்பண்புகள் உடையவரோடு

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்