6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் நான்கு - கண்ணெனத்-தகும் - கல்விக்கண்-திறந்தவர்

  Play Audio

1. ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

Answer: காமராசர்

2. கல்விக் கண் திறந்தவர் என்று போற்றப்படுபவர் யார்?

Answer: காமராசர்

3. கல்விக் கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?

Answer: தந்தை பெரியார்

4. காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளை திறக்க முடிவு செய்தார்?

Answer: 50000பள்ளிகளை

5. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

Answer: ஒரு மைல்

6. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

Answer: 3 மைல்

7. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்?

Answer: 5 மைல்

8. பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: காமராசர்

9. கருப்புக் காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

Answer: காமராசர்

10. காமராசர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?

Answer: 6000

1

11. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் "இலவசக் கட்டாயக் கல்வி" சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் யார்?

Answer: காமராசர்

12. மாணவர்கள் பசியின்றிப் படிக்க "மதிய உணவுத் திட்டத்தைக்" கொண்டு வந்தவர் யார்?

Answer: காமராசர்

13. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் "சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்?

Answer: காமராசர்

14. பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க "பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்" நடத்தியவர் யார்?

Answer: காமராசர்

15. எந்தப் பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?

Answer: மதுரை

16. எந்த ஆண்டு நடுவண் அரசு காமராசருக்குப் பாரதரத்னா விருது வழங்கியது?

Answer: 1976 ம் ஆண்டு

17. காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கு எங்கு உள்ளது?

Answer: சென்னை மற்றும் விருதுநகர்

18. காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?

Answer: சென்னை மெரினா கடற்கரை

19. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யார் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

Answer: காமராசர்

20. கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?

Answer: 2. 10. 2000 ஆம் ஆண்டு

2

21. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?

Answer: ஜூலை 15

22. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் என்ன?

Answer: ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

23. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: பசி + இன்றி

24. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: படிப்பு + அறிவு

25. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: காட்டாறு

26. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ----- அறிமுகப்படுத்தினார்?

Answer: சீருடை திட்டம்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்