1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் போற்றும் நூல்?
Answer: சிலப்பதிகாரம்
2. "திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: இளங்கோவடிகள்
3. "மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: இளங்கோவடிகள்
4. திங்கள் என்பதன் பொருள் என்ன?
Answer: நிலவு
5. கொங்கு என்பதன் பொருள் என்ன?
Answer: மகரந்தம்
6. அலர் என்பதன் பொருள் என்ன?
Answer: மலர்தல்
7. திகிரி என்பதன் பொருள் என்ன?
Answer: ஆணைச்சக்கரம்
8. பொற்கோட்டு என்பதன் பொருள் என்ன?
Answer: பொன்மயமான சிகரத்தில்
9. மேரு என்பதன் பொருள் என்ன?
Answer: இமயமலை
10. நாமநீர் என்பதன் பொருள் என்ன?
Answer: அச்சம் தரும் கடல்
1
11. அளி என்பதன் பொருள் என்ன?
Answer: கருணை
12. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் யார்?
Answer: சோழ மன்னன்
13. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் யார்?
Answer: சோழ மன்னன்
14. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
Answer: இளங்கோவடிகள்
15. இளங்கோவடிகள் எந்த மரபை சேர்ந்தவர்?
Answer: சேர மரபு
16. இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
Answer: கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
17. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று எது?
Answer: சிலப்பதிகாரம்
18. தமிழின் முதல் காப்பியம் எது?
Answer: சிலப்பதிகாரம்
19. முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
20. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
2
21. இரட்டைக் காப்பியங்கள் எவை?
Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை
22. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது?
Answer: சிலப்பதிகாரம்
23. கழுத்தில் சூடுவது எது?
Answer: தார்
24. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?
Answer: ஞாயிறு
25. வெண்குடை பிரித்து எழுதுக?
Answer: வெண்மை + குடை
26. பொற்கோட்டு பிரித்து எழுதுக?
Answer: பொன் + கோட்டு
27. கொங்கு + அலர் சேர்த்து எழுதுக?
Answer: கொங்கலர்
28. அவன் + அளிபோல் சேர்த்து எழுதுக?
Answer: அவனளிபோல்
3