6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - இயற்கை - இயல் இரண்டு - இயற்கை-இன்பம் - சிலப்பதிகாரம்

  Play Audio

1. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் போற்றும் நூல்?

Answer: சிலப்பதிகாரம்

2. "திங்களைப் போற்றதும் திங்களைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

3. "மாமழைப் போற்றதும் மாமழைப் போற்றதும்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

4. திங்கள் என்பதன் பொருள் என்ன?

Answer: நிலவு

5. கொங்கு என்பதன் பொருள் என்ன?

Answer: மகரந்தம்

6. அலர் என்பதன் பொருள் என்ன?

Answer: மலர்தல்

7. திகிரி என்பதன் பொருள் என்ன?

Answer: ஆணைச்சக்கரம்

8. பொற்கோட்டு என்பதன் பொருள் என்ன?

Answer: பொன்மயமான சிகரத்தில்

9. மேரு என்பதன் பொருள் என்ன?

Answer: இமயமலை

10. நாமநீர் என்பதன் பொருள் என்ன?

Answer: அச்சம் தரும் கடல்

1

11. அளி என்பதன் பொருள் என்ன?

Answer: கருணை

12. தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் யார்?

Answer: சோழ மன்னன்

13. காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் யார்?

Answer: சோழ மன்னன்

14. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

Answer: இளங்கோவடிகள்

15. இளங்கோவடிகள் எந்த மரபை சேர்ந்தவர்?

Answer: சேர மரபு

16. இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

Answer: கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

17. ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று எது?

Answer: சிலப்பதிகாரம்

18. தமிழின் முதல் காப்பியம் எது?

Answer: சிலப்பதிகாரம்

19. முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

20. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

2

21. இரட்டைக் காப்பியங்கள் எவை?

Answer: சிலப்பதிகாரம், மணிமேகலை

22. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது?

Answer: சிலப்பதிகாரம்

23. கழுத்தில் சூடுவது எது?

Answer: தார்

24. கதிரவனின் மற்றொரு பெயர் என்ன?

Answer: ஞாயிறு

25. வெண்குடை பிரித்து எழுதுக?

Answer: வெண்மை + குடை

26. பொற்கோட்டு பிரித்து எழுதுக?

Answer: பொன் + கோட்டு

27. கொங்கு + அலர் சேர்த்து எழுதுக?

Answer: கொங்கலர்

28. அவன் + அளிபோல் சேர்த்து எழுதுக?

Answer: அவனளிபோல்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்