1. அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது?
Answer: ஆத்திச்சூடி
2. ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
Answer: ஒளவையார்
3. புதிய ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
Answer: பாரதியார்
4. அறிவியல் ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?
Answer: நெல்லை சு. முத்து
5. "அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: நெல்லை சு. முத்து
6. இயன்றவரை என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: முடிந்தவரை
7. ஒருமித்து என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: ஒன்றுபட்டு
8. ஔடதம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Answer: மருந்து
9. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
Answer: நெல்லை சு. முத்து
10. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் யார்?
Answer: நெல்லை சு. முத்து
1
11. நெல்லை சு. முத்து எத்தனை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்?
Answer: எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்
12. உடல் நோய்க்கு ----- தேவை
Answer: ஔடதம்
13. நண்பர்களுடன் ----- விளையாடு
Answer: ஒருமித்து
14. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: கண்டு + அறி
15. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: ஓய்வு + அற
16. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: ஏனென்று
17. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
Answer: ஔடதமாம்
18. அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Answer: விலகு
19. ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Answer: தெளிவு
20. ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Answer: சோர்வு
21. உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Answer: பொய்மை
2