6 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - எந்திரஉலகம் - அறிவியல்-ஆத்திசூடி

  Play Audio

1. அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது?

Answer: ஆத்திச்சூடி

2. ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?

Answer: ஒளவையார்

3. புதிய ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?

Answer: பாரதியார்

4. அறிவியல் ஆத்திச்சூடி இயற்றியவர் யார்?

Answer: நெல்லை சு. முத்து

5. "அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer: நெல்லை சு. முத்து

6. இயன்றவரை என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: முடிந்தவரை

7. ஒருமித்து என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: ஒன்றுபட்டு

8. ஔடதம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: மருந்து

9. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

Answer: நெல்லை சு. முத்து

10. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் யார்?

Answer: நெல்லை சு. முத்து

1

11. நெல்லை சு. முத்து எத்தனை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்?

Answer: எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்

12. உடல் நோய்க்கு ----- தேவை

Answer: ஔடதம்

13. நண்பர்களுடன் ----- விளையாடு

Answer: ஒருமித்து

14. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: கண்டு + அறி

15. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: ஓய்வு + அற

16. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: ஏனென்று

17. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: ஔடதமாம்

18. அணுகு என்பதன் எதிர்ச்சொல் என்ன?

Answer: விலகு

19. ஐயம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

Answer: தெளிவு

20. ஊக்கம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

Answer: சோர்வு

21. உண்மை என்பதன் எதிர்ச்சொல் என்ன?

Answer: பொய்மை

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்