1. "எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?
Answer: பாரதிதாசன்
2. எத்தினிக்கும் என்பதன் பொருள்?
Answer: முயலும்
3. வெற்பு என்பதன் பொருள்?
Answer: மலை
4. கழனி என்பதன் பொருள்?
Answer: வயல்
5. நிகர் என்பதன் பொருள்?
Answer: சமம்
6. பரிதி என்பதன் பொருள்?
Answer: கதிரவன்
7. அன்னதோர் என்பதன் பொருள்?
Answer: அப்படிஒரு
8. கார்முகில் என்பதன் பொருள்?
Answer: மழைமேகம்
9. துயின்றிருந்தார் என்பதன் பொருள்?
Answer: உறங்கியிருந்தார்
10. எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்?
Answer: இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்
11. பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்?
Answer: பாரதிதாசன்
1
12. பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது?
Answer: பிசிராந்தையார்
13. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது?
Answer: மயில்
14. பின்வருவனவற்றுள் 'மலை 'யை குறிக்கும் சொல்? a. வெற்பு b. காடு c. கழனி d. புவி
Answer: a. வெற்பு
15. 'ஏடெடுத்தேன் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: ஏடு + எடுத்தேன்
16. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Answer: துயின்று + இருந்தார்
17. என்று + உரைக்கும் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Answer: என்றுரைக்கும்
18. பொருத்துக a. கழனி - கதிரவன் b. நிகர் - மேகம் c. பரிதி - சமம் d. முகில் - வயல்
Answer: a - 4, b - 3, c - 1, d - 2
2