1. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ----- எனப்படும்?
Answer: சொல்
2. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் எவை?
Answer: மொழி, பதம், கிளவி
3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
Answer: நான்கு அவை (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)
4. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்?
Answer: இயற்சொற்கள் எனப்படும்
5. இயற்சொல் எத்தனை வகைகளில் வரும்?
Answer: நான்கு வகையில் (பெயர், வினை, இடை, உரி)
6. கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்?
Answer: திரிசொற்கள் எனப்படும்
7. திரிசொற்கள் எத்தனை வகைகளில் வரும்?
Answer: நான்கு வகை (பெயர், வினை, இடை உரி)
1
8. திரிசொற்கள் எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு வகை (ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல்)
9. ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்?
Answer: வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது
10. பல பொருள்கள் குறித்த ஒரு திரிசொல்?
Answer: இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் என பல பொருள் தருகிறது
11. வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?
Answer: திசைச்சொற்கள் எனப்படும்
12. வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?
Answer: வடசொற்கள் எனப்படும்
13. வடசொற்களுக்கு உதாரணம்?
Answer: வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்
14. வடசொற்கள் வகைகள் எத்தனை?
Answer: இரண்டு (தற்சமம், தற்பவம்)
15. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?
Answer: சமஸ்கிருதம்
16. கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதை ----- என்பர்?
Answer: தற்சமம்
2
17. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்?
Answer: இயற்சொல்
18. பலபொருள் தரும் ஒருசொல் என்பது?
Answer: திரிசொல்
19. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?
Answer: சமஸ்கிருதம்
20. பொருத்துக a. இயற்சொல் - 1. பெற்றம் b. திரிசொல் - 2. இரத்தம் c. திசைச்சொல் - 3. அழுவம் d. வடசொல் - 4. சோறு
Answer: a - 4, b - 3, c - 1, d - 2
3