7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - கல்வி - இயல் ஐந்து - ஓதுவது-ஒழியேல் - ஓரெழுத்து-ஒருமொழி-பகுபதம்-பகாப்பதம்

  Play Audio

1. ஓர் எழுத்தோடு பொருள் தரும் சொல்லாக அமைவதை ----- என்பர்?

Answer: ஓரெழுத்து ஒரு மொழி

2. நன்னுல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?

Answer: பவணந்தி முனிவர்

3. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை?

Answer: 42

4. ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் எத்தனை?

Answer: 2 (நொ, து)

5. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்?

Answer: பெயர்ப்பகுபதம்

6. பெயர்ப் பகுபதத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

Answer: 6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)

7. பகுபதமாக அமையும் வினைச்சொல்?

Answer: வினைப்பகுபதம்

8. வினைப்பகுபதத்திற்கு எகா?

Answer: உண்கின்றான் - உண் + கிண்று + ஆன்

9. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

Answer: ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)

10. பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில் வருவது?

Answer: பகுதி

11. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது?

Answer: விகுதி

1

12. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது?

Answer: இடைநிலை

13. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து ----- எனப்படும்?

Answer: சந்தி

14. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் ----- எனப்படும்?

Answer: சாரியை

15. பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்?

Answer: விகாரம்

16. பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல்?

Answer: பகாப்பதம்

17. பகாப்பதங்கள் எத்தனை வகை?

Answer: நான்கு வகை (பெயர், வினை, இடை, உரி) எகா பெயர்ப் பகாப்பதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ் இடைப் பகாப்பதம் - மன், கொல், தில், போல் உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி

18. நன்னுலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை?

Answer: 42

19. 'எழுதினான் 'என்பது?

Answer: வினைப் பகுபதம்

20. பெயர்ப்பகுபதம் ----- வகைப்படும்?

Answer: ஆறு

21. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு?

Answer: இடைநிலை

2

22. பொருத்துக a. பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் b. வினைப் பகுபதம் - மன் c. இடைப் பகாப்பதம் - நனி d. உரிப் பகாப்பதம் - பெரியார்

Answer: a - 4, b - 1, c - 2, d - 3

23. இடம் எத்தனை வகைப்படும்?

Answer: மூன்று (தன்மை, முன்னிலை, படர்கை)

24. தன்னைக் குறிப்பது?

Answer: தன்மை எகா நான், நாங்கள், என், எம்

25. முன்னால் இருப்பவரைக் குறிப்பது?

Answer: முன்னிலை எகா நீ, நீர், உன்

26. தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது?

Answer: படர்க்கை

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்