1. "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: பாரதியார்
2. "எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
Answer: பாரதியார்
3. நிரந்தரம் என்பதன் பொருள் என்ன?
Answer: காலமும் முழுமையும்
4. வைப்பு என்பதன் பொருள் என்ன?
Answer: நிலப்பகுதி
5. சூழ்கலி என்பதன் பொருள் என்ன?
Answer: சூழ்ந்துள்ள அறியாமை இருள்
6. வண்மொழி என்பதன் பொருள் என்ன?
Answer: வளமிக்கமொழி
7. இசை என்பதன் பொருள் என்ன?
Answer: புகழ்
8. தொல்லை என்பதன் பொருள் என்ன?
Answer: பலமை, துன்பம்
9. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் யார்?
Answer: சி. சுப்பிரமணிய பாரதியார்
10. இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?
Answer: பாரதியார்
1
11. சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் யார்?
Answer: பாரதியார்
12. வசனக்கவிதையும் சீட்டுக்கவிகளையும் எழுதிவர் யார்?
Answer: பாரதியார்
13. சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்பட்டவர் யார்?
Answer: பாரதியார்
14. பாரதியாரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் சீர்காக்கும் என்ற கவிதையை இயற்றியவர் யார்?
Answer: பாரதிதாசன்
15. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் என்ன?
Answer: வைப்பு
16. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: என்று + என்றும்
17. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: வானம் + அளந்தது
18. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: அறிந்தனைத்தும்
19. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: வானமறிந்த
2