1. படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது. எனவே இது?
Answer: வினைமுற்று
2. படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்லின் பெயர் என்ன?
Answer: எச்சம்
3. எச்சம் எத்தனை வகைப்படும்?
Answer: இரண்டு வகை (பெயரெச்சம், வினையெச்சம்)
4. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ----- ஆகும்?
Answer: பெயரெச்சம்
5. பெயரெச்சம் ----- காலத்திலும் வரும்?
Answer: மூன்று
6. பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம் பாடுகின்ற பாடல் எக்காலப் பெயரெச்சம்?
Answer: நிகழ்காலப் பெயரெச்சம்
7. பாடும் பாடல் எக்காலப் பெயரெச்சம்?
Answer: எதிர்காலப் பெயரெச்சம்
8. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் ----- எனப்படும்?
Answer: தெரிநிலைப் பெயரெச்சம்
1
9. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ----- எனப்படும்?
Answer: குறிப்பு பெயரெச்சம்
10. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ----- எனப்படும்?
Answer: வினையெச்சம்
11. செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----- எனப்படும்?
Answer: தெரிநிலை வினையெச்சம்
12. காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் ----- எனப்படும்?
Answer: குறிப்பு வினையெச்சம்
2
13. முற்றுப் பெறாமல் என்சி நிற்கும் சொல் ----- எனப்படும்?
Answer: சொல்
14. கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்?
Answer: பார்த்த
15. குறிப்பு வினையெச்சம் ----- வெளிப்படையாகக் காட்டாது?
Answer: காலத்தை
3