8 ஆம் வகுப்பு - முதல் பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் மூன்று - உடலை-ஓம்புமின் - தமிழர்-மருத்துவம்

  Play Audio

1. "மருந்தென வேண்டாவாம் யாக்கை அருந்தியது அற்றது போற்றி உணின்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

Answer: திருவள்ளுவர்

2. அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள் யாவர்?

Answer: நம் தமிழ் மக்கள்

3. உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபுசார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கி பின்பற்றி வந்தவர்கள் யாவர்?

Answer: தமிழர்கள்

4. தொடக்க காலத்தில் மனிதன் தன் நோயை எவ்வாறு தீர்க்க முயற்சி செய்து இருப்பான்?

Answer: வேர், பட்டை, இலை, பூ, கனி

5. பழந்தமிழர்கள் அறிந்திருந்த மருத்துவ முறைகள் யாவை?

Answer: மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம், யோகம்

6. தமிழர்கள் உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் ----- முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்?

Answer: யோகம்

7. வேர்பாரு, தலைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றவர்கள் யாவர்?

Answer: சித்தர்கள்

8. தாவரங்கள் மட்டும் அல்லாமல் ----- , ----- சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திருக்கிறார்கள்?

Answer: உலோகங்களையும், பாஷாணங்களையும்

9. ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்க்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும், ஆனால் ----- மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை?

Answer: தமிழர்

10. "நோய்நாடி நோய் முதல்நாடி" என்று கூறிய நூல் எது?

Answer: திருக்குறள்

1

11. இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்க காரணம் என்ன?

Answer: 1. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். 2. உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணம்

12. நடைமுறையில் உள்ள மருத்துவ முறைககளை குறிப்பிடுக?

Answer: சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்

13. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ----- பயன்படுத்தினர்?

Answer: தாவரங்களை

14. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ----- நீட்சியாகவே உள்ளது?

Answer: உணவின்

15. உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களுள் ஒன்று?

Answer: இரத்தக்கொதிப்பு

16. சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும் நேரமாகும்?

Answer: நல்வாழ்வுக்காக

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்