1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது என்ன?
Answer: பழமொழி
2. நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ----- ?
Answer: அறிவுடைமை
3. ஒரு நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை எது?
Answer: நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை
4. "உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம் உடையவராம்"என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
Answer: கவிமணி தேசிகவிநாயகனார்
5. நித்தம் நித்தம் என்பதன் பொருள் என்ன?
Answer: நாள்தோறும்
6. மட்டு என்பதன் பொருள் என்ன?
Answer: அளவு
7. சுண்ட என்பதன் பொருள் என்ன?
Answer: நன்கு
8. வையகம் என்பதன் பொருள் என்ன?
Answer: உலகம்
9. பேணுவையேல் என்பதன் பொருள் என்ன?
Answer: பாதுகாத்தல்
10. திட்டுமுட்டு என்பதன் பொருள் என்ன?
Answer: தடுமாற்றம்
1
11. கவிமணி தேசிகவிநாகனார் எங்கு பிறந்தார்?
Answer: குமரி மாவட்டம் தேரூரில்
12. கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்?
Answer: தேசிக விநாயகனார்
13. கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?
Answer: 36ஆண்டுகள்
14. ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?
Answer: கவிமணி தேசிகவிநாயகனார்
15. மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: கவிமணி தேசிகவிநாயகனார்
16. உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார்?
Answer: கவிமணி தேசிகவிநாயகனார்
17. காந்தியடிகள் ----- போற்ற வாழ்ந்தவர்?
Answer: வையம்
18. "நலமெல்லாம்"என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
Answer: நலம் + எல்லாம்
19. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக?
Answer: இடமெங்கும்
2