8 ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - நாடு-சமூகம் - இயல் ஏழு - பாருக்குள்ளே-நல்ல-நாடு - வல்லினம்-மிகும்-இடங்களும்-மிகா-இடங்களும்

  Play Audio

1. அந்த இந்த என்னும் சுடடுத்திறிப்புகளை அடுத்து வல்லினம் மிகும் எகா?

Answer: அந்தப்பக்கம், இந்தக்கவிதை

2. எந்த என்னும் வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும் எகா?

Answer: எந்தத்திசை? எந்தச்சட்டை?

3. இரண்டாம் வேற்றுமை உறுப்பாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா?

Answer: தலையைக் காட்டு, பாடத்தைப்படி

4. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா?

Answer: எனக்குத் தெரியும், அவனுக்கு பிடிக்கும்

5. இகரத்தில் முடிவும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் எகா?

Answer: எழுதிப் பார்த்தாள், ஓடிக் களைத்தான்

6. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் எகா?

Answer: பெற்றுக் கொண்டேன், படித்துப் பார்த்தார்

7. எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும் இதில் வல்லினம் மிகும் எகா?

Answer: செல்லாக்காசு, எழுத்தாப்பாடல்

1

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும் எகா?

Answer: மலர்ப்பாதம், தாய்த்தமிழ்

9. உருவாக்கத்தில் வல்லினம் மிகும் எகா?

Answer: தமிழ்த்தாய், வாய்ப்பவளம்

10. என்னும்பப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டும் பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும் எகா?

Answer: எட்டுப்புத்தகம், பத்துக்காசு

11. திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் எகா?

Answer: கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு

12. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது எகா?

Answer: தம்மி படித்தான், யானை பிளிறியது

13. பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது எகா?

Answer: எழுதிய பாடல், எழுதாத பாடல்

14. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமை தொகை) வல்லினம் மிகாது எகா?

Answer: இலை பிரித்தேன், காய் தின்றேன்

15. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது எகா?

Answer: தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்

16. வினைத்தொகையில் வல்லினம் மிகாது எகா?

Answer: எழுதுபொருள், சுடுசோறு

17. அப்படி, இப்படி, எப்படி, ஆகிய சொற்களை தவிர படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது எகா?

Answer: எழுதும்படி சொன்னேன், பாடும்படி கேட்டுக்கொண்டார்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்