9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - கல்வி - இயல் ஐந்து - கசடற-மொழிதல் - கல்வியில்-சிறந்த-பெண்கள்

  Play Audio

1. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி எந்த காலத்தில் நலிந்து காணப்பட்டது?

Answer: இடைக்காலத்தில்

2. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?

Answer: மணிமேகலை

3. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் யார்?

Answer: ஆண்டாள், காரைக்கால் அம்மையார்

4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

Answer: முத்துலெட்சுமி

5. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?

Answer: முத்துலெட்சுமி

6. சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்?

Answer: முத்துலெட்சுமி

7. சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

Answer: முத்துலெட்சுமி

8. முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?

Answer: 1930ஆண்டு

9. முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

Answer: 1952 ஆண்டு

10. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?

Answer: பெரியார்

11. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்து துவைத்தவர் யார்?

Answer: பாரதியார்

12. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?

Answer: பாரதிதாசன்

13. 1882 - இல் முதன்முதலில் பெண் கல்வியை பரிந்துரை செய்த குழு எது?

Answer: ஷண்டர்குழு

1

14. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கிய மாநிலம்?

Answer: மராட்டிய மாநிலம்

15. சமூகத் தன்னார்வலர் தடைகளை மீறிக் கல்வி கற்று பண்டிதராகியவர் யார்?

Answer: பண்டித ரமாபாய்

16. தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர் திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் யார்?

Answer: மூவலூர் இராமாமிர்தம்

17. தேவதாசிமுறை ஒழிப்பு சட்டம் இயற்ற காரணாமாக இருந்தவர் யார்?

Answer: மூவலூர் இராமாமிர்தம்

18. தமிழக அரசு 8ம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யார் பெயரில் வழங்கி வருகிறது?

Answer: மூவலூர் இராமாமிர்தம்

19. பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராக வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?

Answer: ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

20. இந்தியாவில் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை 80ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியவர் யார்?

Answer: கைலாஷ் சத்யார்த்தி

21. கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

Answer: 2014

22. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது?

Answer: 12 (1997)

23. மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

Answer: 2014

24. 1848இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?

Answer: சாவித்திரிபாய் பூலே

25. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?

Answer: சாவித்திரிபாய் பூலே

26. பட்டமேற்படிப்புக்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார் பெயரில் வழங்கப்படுகிறது?

Answer: ஈ. வெ. ரா. நாகம்மை

27. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது?

Answer: கல்வி, திருமண உதவித் தொகை

28. தனித்தமிழில் சிறந்து விளங்கியவர் யார்?

Answer: நீலாம்பிகை அம்மையார்

2

29. மறைமலையடிகளின் மகள் யார்?

Answer: நீலாம்பிகை அம்மையார்

30. நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள்?

Answer: தனித்தமிழ் கடடுரை, வடசொல் - தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்

31. மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

Answer: 1964

32. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

Answer: 1929

33. திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர்?

Answer: ஈ. த. இராஜேஸ்வரி அம்மையார்

34. இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றியவர் யார்?

Answer: ஈ. த இராஜேஸ்வரி அம்மையார்

35. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார்?

Answer: ஈ. த. இராஜேஸ்வரி அம்மையார்

3

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்