9 ஆம் வகுப்பு - இரண்டு பருவம் - அறிவியல்-தொழில்நுட்பம் - இயல் நான்கு - எட்டுத்திக்கும்-சென்றிடுவீர் - உயிர்வகை

  Play Audio

1. "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer: தொல்காப்பியம்

2. உணர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

Answer: வினையாலணையும் பெயர்

3. ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: புல், மரம்

4. ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: சிப்பி, நத்தை

5. மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: கரையான், எறும்பு

6. நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: நண்டு, தும்பி

7. ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: பறவை, விலங்கு

8. ஆறறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

Answer: மனிதன்

9. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

Answer: தொல்காப்பியம்

10. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

Answer: தொல்காப்பியர்

1

11. பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் முதலாக அமைந்த நூல் எது?

Answer: தொல்காப்பியம்

12. தொல்காப்பியத்தில் எத்தனை அதிராகம் உள்ளது?

Answer: மூன்று (எழுத்து, சொல், பொருள்)

13. தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது?

Answer: 27 இயல்கள்

14. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது?

Answer: மொழி இலக்கணம்

15. தொல்காப்பியத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்கும் அதிகாரம் எது?

Answer: பொருளதிகாரம்

16. எந்த நூலில் பிறப்பியலில் எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்?

Answer: தொல்காப்பியம்

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்